மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

புறநானூறு

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே-மையற்று
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே

நலங்கிள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

Next Post

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

Related Posts

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

புறநானூறு குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்கூந்தல் கொய்து குறுந்தொடு நீக்கிஅல்லி உணவின் மனைவியடு இனியேபுல்என் றனையால்…
Read More

ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்

புறநானூறு ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்இன்னாது…
Read More

அறையும் பொறையும் மணந்த தலைய

புறநானூறு அறையும் பொறையும் மணந்த தலையஎண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-கூர் வேல் குவைஇய மொய்ம்பின்தேர்வண் பாரி…
Read More