நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

புறநானூறு

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படைஅமை மறவரும் உடையும் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே

நெடுஞ்செழியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

Next Post

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

Related Posts

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

புறநானூறு மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரேதுன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரேதாள்தாழ் படுமணி…
Read More

ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்

புறநானூறு ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்வாடா யாணர் நாடும் ஊரும்பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடுகாலன் என்னும் கண்ணிலி உய்ப்பமேலோர்…
Read More

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு

புறநானூறு வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடுகொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடுமலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅஉரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடுசெருமேம்…
Read More