எந்தை வாழி ஆதனுங்க என்

புறநானூறு

எந்தை வாழி ஆதனுங்க என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே
நின்யான் மறப்பின் மறக்குங் காலை
என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே

கள்ளில் ஆத்திரையனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *