மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது

புறநானூறு

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியடு
நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ
செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி
உயிர்சிறிது உடையள் ஆயின் எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே அதனால்
அறனில் கூற்றம் திறனின்று துணியப்
பிறனா யினன்கொல் இறீஇயர் என் உயிர்` என
நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை
விடுத்தேன் வாழியர் குருசில் உதுக்காண்
அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே

பெருங்குன்றூர் கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *