ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

புறநானூறு

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல்கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
டுவளி தொகுப்ப வீண்டிய
வடுவா ழெக்கர் மணலினும் பலவே

மருதனிளநாகனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

Next Post

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

Related Posts

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை

புறநானூறு கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரைஅருளிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்வரிநவில் பனுவல்…
Read More

வல்லா ராயினும் வல்லுந ராயினும்

புறநானூறு வல்லா ராயினும் வல்லுந ராயினும்புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்னஉரைசால் சிறப்பிற் புகழ்சான் மாறநின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்டிறங்குகதிர்க்…
Read More

நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

புறநானூறு நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்ஓம்பாது கடந்தட்டு அவர்முடி புனைந்த பசும் பொன்னின்அடி பொலியக் கழல் தைஇயவல் லாளனை வய வேந்தேயாமே நின்…
Read More