எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

புறநானூறு

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல விடையின்று குறுகிச்
செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
வான நாண வரையாது சென்றோர்க்
கானா தீயுங் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே

மதுரைக்குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

Next Post

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

Related Posts

இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்

புறநானூறு இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்துதழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கிமறைஎனல் அறியா மாயமில் ஆயமொடுஉயர்சினை மருதத்…
Read More

மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்

புறநானூறு மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்கேட்பின் அல்லது காண்பறி யலையேகாண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்கலவ…
Read More

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

புறநானூறு என்னை மார்பிற் புண்ணும் வெய்யநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லாதுஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்நெல்நீர் எறிந்து…
Read More