அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

புறநானூறு

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
வடபுல மன்னர் வாட வடல்குறித்
தின்னா வெம்போ ரியறேர் வழுதி
இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரி னொரீஇ யினியே
கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
கான வாரண மீனும்
காடாகி விளியு நாடுடை யோரே

மருதினிள நாகனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

Next Post

முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

Related Posts

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்

புறநானூறு கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்நெருநல் உண்டனம் என்னாது பின்னும்செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்அனையர் வாழியோ இரவலர் அவரைப்புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்உடைமை ஆகும்…
Read More

ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்

புறநானூறு ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்பாஅல் இன்மையின் தோலொடு திரங்கிஇல்லி தூர்த்த பொல்லா வறுமுலைசுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துவம் நோக்கிநீரொடு நிறைந்த…
Read More

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி

புறநானூறு மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சிபோதுவிரி பன்மர னுள்ளும் சிறந்தகாதல் நன்மரம் நீ நிழற் றிசினேகடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்ததொடியுடை மகளிர் அல்குலும் கிடத்திகாப்புடைப்…
Read More