அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி

புறநானூறு

அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா என
என்இவண் ஒழித்த அன்பி லாள
எண்ணாது இருக்குவை அல்லை
என்னிடம் யாது மற்று இசைவெய் யோயே

பொத்தியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *