அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்

புறநானூறு

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்
இறந்தோன் தானே அளித்துஇவ் வுலகம்
அருவி மாறி அஞ்சுவரக் கருகிப்
பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்
பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்துகட்டு அழித்த வேங்கையின்
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே

கருங்குழல் ஆதனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *