மாசற விசித்த வார்புஉறு வள்பின்

புறநானூறு

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற் றமிழ்முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்து நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே வியலிடம் கமழ
இவன்இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில் நீ ஈங்குஇது செயலே

மோசிகீரனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நாடன் என்கோ ஊரன் என்கோ

Next Post

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

Related Posts

அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

புறநானூறு அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்வேட்டச் சிறா அர் சேட்புலம் படராதுபடைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவையாணர் நல்லவை பாணரொடு ஓராங்குவருவிருந்து அயரும்…
Read More

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

புறநானூறு திண் பிணி முரசம் இழுமென முழங்கச்சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டுஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்நோய்ப்பால் விளிந்த யாக்கை…
Read More

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

புறநானூறு சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்புலி சேர்ந்து போகிய கல்அளை போலஈன்ற வயிறோ இதுவேதோன்றுவன் மாதோ போர்க்களத் தானே…
Read More