செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்

புறநானூறு

செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வின்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன்று ஆகல் வேண்டும் பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே

மாறோக்கத்து நப்பசலையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *