வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ

புறநானூறு

வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்கஎனக்
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின்
பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங்காலத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே

மோசிகீரனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *