கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்

புறநானூறு

கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
களம்மலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்
வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்
பொய்யா எழினி பொருதுகளம் சேர
ஈன்றோர் நீத்த குழவி போலத்
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகிலும் மிக நனி
நீ இழந் தனையே அறனில் கூற்றம்
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்
வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்
நேரார் பல்லுயிர் பருகி
ஆர்குவை மன்னோ அவன் அமர்அடு களத்தே

அரிசில் கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *