புறநானூறு
பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ
இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்பூண்
போர்அடு தானை எவ்வி மார்பின்
எ·குஉறு விழுப்புண் பல என
வைகறு விடியல் இயம்பிய குரலே
வெள்ளெருக்கிலையார்
Leave a Reply Cancel reply