கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த

புறநானூறு

கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடுமுன் னினனே கட்கா முறுநன்
தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
பாடுநர் கடும்பும் பையென் றனவே
தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே
ஆள்இல் வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே
வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப
எந்தை ஆகுல அதற்படல் அறியேன்
அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
என்ஆ குவர்கொல் என் துன்னி யோரே
மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு
வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
அவல மறுசுழி மறுகலின்
தவலே நன்றுமன் தகுதியும் அதுவே

பெருஞ்சித்திரனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *