புறநானூறு
கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு
உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்
அகல்நாட்டு அண்ணல் புகாவே நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி
ஒருவழிப் பட்டன்று மன்னே இன்றே
அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை
உயர்நிலை உலகம் அவன்புக வரி
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனாக் கண்ணள்
மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே
தும்பிசேர் கீரனார்
Leave a Reply Cancel reply