புறநானூறு
இளையரும் முதியரும் வேறுபுலம் படர
எதிர்ப்ப எழாஅய் மார்பமண் புல்ல
இடைச்சுரத்து இறுத்த மள்ள விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்
இன்னன் ஆயினன் இளையோன் என்று
நின்னுரை செல்லும் ஆயின் மற்று
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு என நாளும்
ஆனாது புகழும் அன்னை
யாங்குஆ குவள்கொல் அளியள் தானே
கயமனார்
Leave a Reply Cancel reply