செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்

புறநானூறு

செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்
குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
யார்கொலோ அளியன் தானே தேரின்
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும் இலனே காலைப்
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்
கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
சிலையின் மாற்றி யோனே அவைதாம்
மிகப்பல ஆயினும் என்னாம்-எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியடு
நாள்உறை மத்தொலி கேளா தோனே

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *