முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்

புறநானூறு

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
பச்சூன் தின்று பைந்நிணப் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்
புலம்புக் கனனே புல்அணற் காளை
ஒருமுறை உண்ணா அளவைப் பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி
ஆதரக் கழுமிய துகளன்
காய்தலும் உண்டு அக் கள்வெய் யோனே

உலோச்சனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *