காலனும் காலம் பார்க்கும் பாராது

புறநானூறு

காலனும் காலம் பார்க்கும் பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்
பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ நிற் சினைஇயோர் நாடே

கோவூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

Next Post

ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

Related Posts

இன்று செலினுந் தருமே சிறுவரை

புறநானூறு இன்று செலினுந் தருமே சிறுவரைநின்று செலினுந் தருமே பின்னும்முன்னே தந்தனென் என்னாது துன்னிவைகலும் செலினும் பொய்யலன் ஆகியாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்தான்வேண்டி யாங்குத்…
Read More

அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்

புறநானூறு அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாதுஇருள்கண் கெடுத்த பருதி ஞாலத்துஇடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்குஅர சிழந்து…
Read More

செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்

புறநானூறு செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடுயார்கொலோ அளியன் தானே தேரின்ஊர்பெரிது இகந்தன்றும்…
Read More