புறவின் அல்லல் சொல்லிய கறையடி

புறநானூறு

புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக
ஈதல்நின் புகழும் அன்றே சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
முறைமைநின் புகழும் அன்றே மறம்மிக்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டியஏம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே

மாறோக்கத்து நப்பசலையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வரை புரையும் மழகளிற்றின் மிசை

Next Post

நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

Related Posts

இரு முந்நீர்க் குட்டமும்

புறநானூறு இரு முந்நீர்க் குட்டமும்வியன் ஞாலத்து அகலமும்வளி வழங்கு திசையும்வறிது நிலைஇய காயமும் என்றாங்குஅவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியைஅறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்சோறு…
Read More

மாசற விசித்த வார்புஉறு வள்பின்

புறநானூறு மாசற விசித்த வார்புஉறு வள்பின்மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞைஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்குருதி வேட்கை உருகெழு முரசம்மண்ணி வாரா…
Read More