நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

புறநானூறு

நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை செருவத் தானே

மாறோக்கத்து நப்பசலையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அடுநை யாயினும் விடுநை யாயினும்

Next Post

வரை புரையும் மழகளிற்றின் மிசை

Related Posts

ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்

புறநானூறு ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்பலரும் வருவர் பரிசில் மாக்கள்வரிசை அறிதலோ அரிதே பெரிதும்ஈதல் எளிதே மாவண் தோன்றல்அது நற்கு அறிந்தனை யாயின்பொது…
Read More

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்

புறநானூறு அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்வென்று எறி முரசின் வேந்தர்…
Read More

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

புறநானூறு கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோவண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக எனமாட மதுரையும் தருகுவன்…
Read More