பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்

புறநானூறு

பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின் இனம்சால் யானை
நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே
நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்
சிறுவர் தாயே பேரிற் பெண்டே
நோகோ யானே நோக்குமதி நீயே
மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
வென்றிதரு வேட்கையர் மன்றம் கொண்மார்
பேரமர் உழந்த வெருவரு பறந்தலை
விழுநவி பாய்ந்த மரத்தின்
வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே

கழாத்தலையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *