சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்

புறநானூறு

சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின் யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
மணிமருள் மாலை சூட்டி அவன் தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே

நெடுங்கழுத்துப் பரணர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *