நளி கடல் இருங் குட்டத்து

புறநானூறு

நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்
களிறு சென்று களன் அகற்றவும்
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி
அரைசு பட அமர் உழக்கி
உரை செல முரசு வெளவி
முடித் தலை அடுப் பாகப்
புனல் குருதி உலைக் கொளீஇத்
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே

மாங்குடி கிழவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

Next Post

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

Related Posts

இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்

புறநானூறு இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்துதழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கிமறைஎனல் அறியா மாயமில் ஆயமொடுஉயர்சினை மருதத்…
Read More

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

புறநானூறு சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னேபெரிய கட் பெறினேயாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னேசிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னேபெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னேஎன்பொடு…
Read More

கடந்து அடு தானை மூவிரும் கூடி

புறநானூறு கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதேமுந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடுமுந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்யாமும் பாரியும் உளமேகுன்றும்…
Read More