நெல் அரியும் இருந் தொழுவர்

புறநானூறு

நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்
தென் கடல்திரை மிசைப்பா யுந்து
திண் திமில் வன் பரதவர்
வெப் புடைய மட் டுண்டு
தண் குரவைச் சீர்தூங் குந்து
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குலவுத் தாழைத்
தீ நீரோடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
புனலம் புதவின் மிழலையடு_ கழனிக்
கயலார் நாரை போர்வில் சேக்கும்
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
நின்று நிலைஇயர் நின் நாண்மீன் நில்லாது
படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே
நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
இரவன் மாக்கள் ஈகை நுவல
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
மலர்தலை உலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது நின்று விளிந் தோரே

மாங்குடி கிழவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்

Next Post

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

Related Posts

இரு முந்நீர்க் குட்டமும்

புறநானூறு இரு முந்நீர்க் குட்டமும்வியன் ஞாலத்து அகலமும்வளி வழங்கு திசையும்வறிது நிலைஇய காயமும் என்றாங்குஅவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியைஅறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்சோறு…
Read More

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

புறநானூறு ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராதுஇலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்தவல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்முதுகுமெய்ப் புலைத்தி போலத்தாவுபு தெறிக்கும்…
Read More

மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்

புறநானூறு மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்கடவுட் பேணிய குறவர் மாக்கள்பெயல்கண் மாறிய உவகையர் சாரல்புனைத்தினை அயிலும் நாட…
Read More