புறநானூறு
கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க
மயில்அம் சாயல் மாஅ யோளடு
பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்
பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
புன்புறப் பெடையடு வதியும்
யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே
பெருங்குன்றூர் கிழார்
Leave a Reply Cancel reply