புறநானூறு
களிறு முகந்து பெயர்குவம் எனினே
ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்
கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன
கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே
கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி
நெடும்பீடு அழிந்து நிலம்சேர்ந் தனவே
கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே
மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி
வளிவழக் கறுத்த வங்கம் போலக்
குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றி
இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து
ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ
கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்
பாடி வந்த தெல்லாம் கோடியர்
முழவுமருள் திருமணி மிடைந்தநின்
அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே
கழாத் தலையார்