புறநானூறு
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட் டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே
வான்மீகியார்
புறநானூறு
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட் டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே
வான்மீகியார்
புறநானூறு
உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்
செருநவில் வேழம் கொண்மூ ஆகத்
தேர்மா அழிதுளி தலைஇ நாம் உறக்
கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை
இழிதரு குருதியடு ஏந்திய ஒள்வாள்
பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்
கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே
________________தண்ட மாப்பொறி
மடக்கண் மயில் இயன் மறலி யாங்கு
நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து
மென்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவ___________________________
_____________ அணியப் புரவி வாழ்கெனச்
சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர
நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
அம்பழி பொழுதில் தமர்முகம் காணா
_______________________ற்றொக்கான
வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை
மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு
உரும் எறி மலையின் இருநிலம் சேரச்
சென்றோன் மன்ற சொ________
_________ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப
வஞ்சி முற்றம் வயக்கள னாக
அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்
கொண்டனை பெரும குடபுலத்து அதரி
பொலிக அத்தை நின் பணைதனற ளம்
விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்ற
புகர்முக முகவை பொலிக என்றி ஏத்திக்
கொண்டனர் என்ப பெரியோர் யானும்
அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற
__________லெனாயினுங் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்
மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும
பகைவர் புகழ்ந்த அண்மை நகைவர்க்குத்
தாவின்று உதவும் பண்பின் பேயடு
கணநரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
செஞ்செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே
கோவூர்கிழார்
புறநானூறு
குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே
வைத்த தன்றே வெறுக்கை
_____________________________________ணை
புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
தொக்குஉயிர் வெளவுங் காலை
இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே
பிரமனார்
புறநானூறு
விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி
ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்
பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய் நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே
மாங்குடி கிழார்
புறநானூறு
களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையடு பிறழ்பல்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று இம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே
தாயங்கண்ணனார்
புறநானூறு
போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப்
பறையடு தகைத்த கலப்பையென் முரவுவாய்
ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
மன்ற வேம்பின் ஒண்பூ உரைப்பக்
குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்
கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப
வருகணை வாளி__________ அன்பின்று தலைஇ
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை
வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக்
குறைத்தலைப் படுபிணன் எதிரப் போர்பு அழித்து
யானை எருத்தின் வாள்மட லோச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்
மதியத் தன்ன என் விசியுறு தடாரி
அகன்கண் அதிர ஆகுளி தொடாலின்
பணைமருள் நெடுந்தாள் பல்பிணர்த் தடக்கைப்
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும
களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி
விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள்
குடர்த்தலை மாலை சூடி உணத்தின
ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர் பல என
உருகெழு பேய்மகள் அயரக்
குருதித்துக ளாடிய களம்கிழ வோயே
கல்லாடனார்
புறநானூறு
மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
ஊரது நிலைமையும் இதுவே
_____________________________
புறநானூறு
_____________________________________வி
நாரும் போழும் செய்துண்டு ஓராங்குப்
பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
வேர்உழந்து உலறி மருங்கு செத்து ஒழியவந்து
அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை
வரிமரல் திரங்கிய கானம் பிற்படப்
பழுமரம் உள்ளிய பறவை போல
ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
விளைந்த செழுங்குரல் அரிந்து கால் குவித்துப்
படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி
எருதுகளி றாக வாள்மடல் ஓச்சி
அதரி திரித்த ஆளுகு கடாவின்
அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
வெந்திறல் வியன்களம் பொலிக என்று ஏத்தி
இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின்
வரைமருள் முகவைக்கு வந்தனென் பெரும
வடிநவில் எஃகம் பாய்ந்தெனக் கிடந்த
தொடியுடைத் தடக்கை ஓச்சி வெருவார்
இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
அழுகுரற் பேய்மகள் அயரக் கழுகொடு
செஞ்செவி எருவை திரிதரும்
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே
ஊன்பொதி பசுங்குடையார்
புறநானூறு
அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
கயலார் நாரை உகைத்த வாளை
புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே
பரணர்
புறநானூறு
இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்
கருங்கை யானை கொண்மூவாக
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் நாக வயங்குடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக
அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
வெவ் விசைப் புரவி வீசுவளி யாக
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
ஈரச் செறுவயின் தேர்ஏ ராக
விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு
கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
பாடி வந்திசின் பெரும பாடான்று
எழிலி தோயும் இமிழிசை யருவிப்
பொன்னுடை நெடுங்கோட்டு இமையத் தன்ன
ஓடைநுதல ஒல்குதல் அறியாத்
துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகை வெய் யோயே
பரணர்