Tag: புறநானூறு

  • பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

    புறநானூறு

    பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
    ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
    வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
    ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
    கைவிட் டனரே காதலர் அதனால்
    விட்டோரை விடாஅள் திருவே
    விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

    வான்மீகியார்

  • உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்

    புறநானூறு

    உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்
    செருநவில் வேழம் கொண்மூ ஆகத்
    தேர்மா அழிதுளி தலைஇ நாம் உறக்
    கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை
    இழிதரு குருதியடு ஏந்திய ஒள்வாள்
    பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப
    மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்
    கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே
    ________________தண்ட மாப்பொறி
    மடக்கண் மயில் இயன் மறலி யாங்கு
    நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து
    மென்தோள் மகளிர் மன்றம் பேணார்
    புண்ணுவ___________________________
    _____________ அணியப் புரவி வாழ்கெனச்
    சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர
    நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
    அம்பழி பொழுதில் தமர்முகம் காணா
    _______________________ற்றொக்கான
    வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை
    மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு
    உரும் எறி மலையின் இருநிலம் சேரச்
    சென்றோன் மன்ற சொ________
    _________ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப
    வஞ்சி முற்றம் வயக்கள னாக
    அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்
    கொண்டனை பெரும குடபுலத்து அதரி
    பொலிக அத்தை நின் பணைதனற ளம்
    விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்ற
    புகர்முக முகவை பொலிக என்றி ஏத்திக்
    கொண்டனர் என்ப பெரியோர் யானும்
    அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற
    __________லெனாயினுங் காதலின் ஏத்தி
    நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்
    மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும
    பகைவர் புகழ்ந்த அண்மை நகைவர்க்குத்
    தாவின்று உதவும் பண்பின் பேயடு
    கணநரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
    செஞ்செவி எருவை குழீஇ
    அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே

    கோவூர்கிழார்

  • குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்

    புறநானூறு

    குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்
    பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
    பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
    மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே
    வைத்த தன்றே வெறுக்கை
    _____________________________________ணை
    புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
    தொக்குஉயிர் வெளவுங் காலை
    இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே

    பிரமனார்

  • விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி

    புறநானூறு

    விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி
    ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
    இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
    கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்
    பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்
    கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்
    ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
    ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
    மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த
    வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
    வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்
    புலவுக்களம் பொலிய வேட்டோய் நின்
    நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே

    மாங்குடி கிழார்

  • களரி பரந்து கள்ளி போகிப்

    புறநானூறு

    களரி பரந்து கள்ளி போகிப்
    பகலும் கூஉம் கூகையடு பிறழ்பல்
    ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
    அஞ்சுவந் தன்று இம் மஞ்சுபடு முதுகாடு
    நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
    என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
    எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
    மன்பதைக் கெல்லாம் தானாய்த்
    தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே

    தாயங்கண்ணனார்

  • போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்

    புறநானூறு

    போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்
    தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப்
    பறையடு தகைத்த கலப்பையென் முரவுவாய்
    ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
    மன்ற வேம்பின் ஒண்பூ உரைப்பக்
    குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
    அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்
    கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப
    வருகணை வாளி__________ அன்பின்று தலைஇ
    இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை
    வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக்
    குறைத்தலைப் படுபிணன் எதிரப் போர்பு அழித்து
    யானை எருத்தின் வாள்மட லோச்சி
    அதரி திரித்த ஆள் உகு கடாவின்
    மதியத் தன்ன என் விசியுறு தடாரி
    அகன்கண் அதிர ஆகுளி தொடாலின்
    பணைமருள் நெடுந்தாள் பல்பிணர்த் தடக்கைப்
    புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும
    களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி
    விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள்
    குடர்த்தலை மாலை சூடி உணத்தின
    ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து
    வயங்குபன் மீனினும் வாழியர் பல என
    உருகெழு பேய்மகள் அயரக்
    குருதித்துக ளாடிய களம்கிழ வோயே

    கல்லாடனார்

  • மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்

    புறநானூறு

    மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
    நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
    ஊரது நிலைமையும் இதுவே
    _____________________________

  • வி நாரும் போழும் செய்துண்டு ஓராங்குப்

    புறநானூறு

    _____________________________________வி
    நாரும் போழும் செய்துண்டு ஓராங்குப்
    பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு
    ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
    வேர்உழந்து உலறி மருங்கு செத்து ஒழியவந்து
    அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
    உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
    பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
    கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை
    வரிமரல் திரங்கிய கானம் பிற்படப்
    பழுமரம் உள்ளிய பறவை போல
    ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
    துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
    விளைந்த செழுங்குரல் அரிந்து கால் குவித்துப்
    படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி
    எருதுகளி றாக வாள்மடல் ஓச்சி
    அதரி திரித்த ஆளுகு கடாவின்
    அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
    வெந்திறல் வியன்களம் பொலிக என்று ஏத்தி
    இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின்
    வரைமருள் முகவைக்கு வந்தனென் பெரும
    வடிநவில் எஃகம் பாய்ந்தெனக் கிடந்த
    தொடியுடைத் தடக்கை ஓச்சி வெருவார்
    இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
    அழுகுரற் பேய்மகள் அயரக் கழுகொடு
    செஞ்செவி எருவை திரிதரும்
    அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா

    புறநானூறு

    அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
    நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
    புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
    வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
    கயலார் நாரை உகைத்த வாளை
    புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
    ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
    சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
    வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
    மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே

    பரணர்

  • இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்

    புறநானூறு

    இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்
    கருங்கை யானை கொண்மூவாக
    நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
    வாள்மின் நாக வயங்குடிப்பு அமைந்த
    குருதிப் பலிய முரசுமுழக் காக
    அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
    வெவ் விசைப் புரவி வீசுவளி யாக
    விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
    கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
    ஈரச் செறுவயின் தேர்ஏ ராக
    விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
    செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
    பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
    விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
    பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு
    கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
    பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
    பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள
    தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
    வேய்வை காணா விருந்தின் போர்வை
    அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
    பாடி வந்திசின் பெரும பாடான்று
    எழிலி தோயும் இமிழிசை யருவிப்
    பொன்னுடை நெடுங்கோட்டு இமையத் தன்ன
    ஓடைநுதல ஒல்குதல் அறியாத்
    துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
    வேழ முகவை நல்குமதி
    தாழா ஈகைத் தகை வெய் யோயே

    பரணர்