Tag: புறநானூறு

  • களர்ப்படு கூவல் தோண்டி நாளும்

    புறநானூறு

    களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
    புலைத்தி கழீஇய தூவெள் அறுவை
    தாதுஎரு மறுகின் மாசுண இருந்து
    பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
    ஒருவரும் இல்லை மாதோ செருவத்துச்
    சிறப்புடைச் செங்கண் புகைய வோர்
    தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே

    ஔவையார்

  • பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்

    புறநானூறு

    பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
    செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு
    உயவொடு வருந்தும் மன்னே இனியே
    புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்
    முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே
    உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
    மான்உளை அன்ன குடுமித்
    தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே

    பொன்முடியார்

  • பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்

    புறநானூறு

    பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
    மின்நேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
    நன்மை நிறைந்த நயவரு பாண
    சீறூர் மன்னன் சிறியிலை எ·கம்
    வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே
    வேந்துஉடன்று எறிந்த வேலே என்னை
    சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே
    உளங்கழி சுடர்ப்படை ஏந்தி நம் பெருவிறல்
    ஓச்சினன் துரந்த காலை மற்றவன்
    புன்தலை மடப்பிடி நாணக்
    குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே

    கோவூர் கிழார்

  • ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ

    புறநானூறு

    ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
    குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
    வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
    வேனல் வரி அணில் வாலத்து அன்ன
    கான ஊகின் கழன்றுகு முதுவீ
    அரியல் வான்குழல் சுரியல் தங்க
    நீரும் புல்லும் ஈயாது உமணர்
    யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
    வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
    பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு
    வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
    எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் எனப்
    பண் கொளற்கு அருமை நோக்கி
    நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே

  • களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி

    புறநானூறு

    களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி
    அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
    ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
    நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
    விருந்து எதிர் பெறுகதில் யானே என்ஐயும்
    ஒ_________________________ வேந்தனொடு
    நாடுதரு விழுப்பகை எய்துக எனவே

    அள்ளூர் நன் முல்லையார்

  • வயலைக் கொடியின் வாடிய மருங்கின்

    புறநானூறு

    வயலைக் கொடியின் வாடிய மருங்கின்
    உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
    எல்லி வந்து நில்லாது புக்குச்
    சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
    ஏணியும் சீப்பும் மாற்றி
    மாண்வினை யானையும் மணிகளைந் தனவே

    மதுரை வேளாசான்

  • கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி

    புறநானூறு

    கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
    நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
    வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
    பண்ணற்கு விரைதி நீயேநெருநை
    எம்முன் தப்பியோன் தம்பியடு ஓராங்கு
    நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்
    புன்வயிறு அருத்தலும் செல்லான் வன்மான்
    கடவும் என்ப பெரிதே அது கேட்டு
    வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
    இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
    இரண்டா காது அவன் கூறியது எனவே

    அரிசில்கிழார்

  • நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ

    புறநானூறு

    நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ
    உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
    எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
    வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
    ஆட்டிக் காணிய வருமே நெருநை
    உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
    கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து அவர்
    கயந்தலை மடப்பிடி புலம்ப
    இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே

    எருமை வெளியனார்

  • வெடிவேய் கொள்வது போல ஓடித்

    புறநானூறு

    வெடிவேய் கொள்வது போல ஓடித்
    தாவுபு உகளும் மாவே பூவே
    விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
    நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
    ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
    கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய
    நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்
    நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
    வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
    விண்ணிவர் விசும்பின் மீனும்
    தண்பெயல் உறையும் உறையாற் றாவே

    காமக் கண்ணியார்

  • பல் சான்றீரே பல் சான்றீரே

    புறநானூறு

    பல் சான்றீரே பல் சான்றீரே
    குமரி மகளிர் கூந்தல் புரைய
    அமரின் இட்ட அருமுள் வேலிக்
    கல்லென் பாசறைப் பல்சான் றீரே
    முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்
    ஒளிறு ஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்
    எனைநாள் தங்கும்நும் போரே அனைநாள்
    எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
    எதிர்சென்று எறிதலும் செல்லான் அதனால்
    அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே
    பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண்
    நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
    வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
    எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
    வேந்தூர் யானைக்கு அல்லது
    ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே

    ஆவூர் மூலங்கிழார்