Tag: புறநானூறு

  • நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

    புறநானூறு

    நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
    முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
    படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற
    மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
    முலைஅறுத் திடுவென் யான் எனச் சினைஇக்
    கொண்ட வாளடு படுபிணம் பெயராச்
    செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
    படுமகன் கிடக்கை காணூஉ
    ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே

    காக்கைபாடினியார்

  • நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்

    புறநானூறு

    நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
    குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
    நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
    எம்மினும் பேர்எழில் இழந்து வினை எனப்
    பிறர்மனை புகுவள் கொல்லோ
    அளியள் தானே பூவிலைப் பெண்டே

    நொச்சி நியமங்கிழார்

  • மீன்உண் கொக்கின் தூவி அன்ன

    புறநானூறு

    மீன்உண் கொக்கின் தூவி அன்ன
    வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
    களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
    ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
    நோன்கழை துயல்வரும் வெதிரத்து
    வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே

    பூங்கணுத்திரையார்

  • வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்

    புறநானூறு

    வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
    யாம்தனக்கு உறுமறை வளாவ விலக்கி
    வாய்வாள் பற்றி நின்றனென் என்று
    சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்
    ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
    என்முறை வருக என்னான் கம்மென
    எழுதரு பெரும்படை விலக்கி
    ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே

    விரிச்சியூர் நன்னாகனார்

  • சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்

    புறநானூறு

    சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்
    தூவெள் அறுவை மாயோற் குறுகி
    இரும்புள் பூசல் ஓம்புமின் யானும்
    விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
    என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே
    கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
    மணிமருள் மாலை சூட்டி அவன் தலை
    ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே

    நெடுங்கழுத்துப் பரணர்

  • இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்

    புறநானூறு

    இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்
    இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்
    நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
    எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
    அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே
    மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
    உறைப்புழி ஓலை போல
    மறைக்குவன் பெரும நிற் குறித்துவரு வேலே

    ஔவையார்

  • வயலைக் கொடியின் வாடிய மருங்கின்

    புறநானூறு

    வயலைக் கொடியின் வாடிய மருங்கின்
    உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
    எல்லி வந்து நில்லாது புக்குச்
    சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
    ஏணியும் சீப்பும் மாற்றி
    மாண்வினை யானையும் மணிகளைந் தனவே

    மதுரை வேளாசான்

  • கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி

    புறநானூறு

    கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
    நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
    வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
    பண்ணற்கு விரைதி நீயேநெருநை
    எம்முன் தப்பியோன் தம்பியடு ஓராங்கு
    நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்
    புன்வயிறு அருத்தலும் செல்லான் வன்மான்
    கடவும் என்ப பெரிதே அது கேட்டு
    வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
    இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
    இரண்டா காது அவன் கூறியது எனவே

    அரிசில்கிழார்

  • நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ

    புறநானூறு

    நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ
    உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
    எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
    வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
    ஆட்டிக் காணிய வருமே நெருநை
    உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
    கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து அவர்
    கயந்தலை மடப்பிடி புலம்ப
    இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே

    எருமை வெளியனார்

  • வெடிவேய் கொள்வது போல ஓடித்

    புறநானூறு

    வெடிவேய் கொள்வது போல ஓடித்
    தாவுபு உகளும் மாவே பூவே
    விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
    நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
    ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
    கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய
    நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்
    நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
    வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
    விண்ணிவர் விசும்பின் மீனும்
    தண்பெயல் உறையும் உறையாற் றாவே

    காமக் கண்ணியார்