புறநானூறு
ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல்ஆன் கோவலர் படலை சூட்டக்
கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும் நின்னொடு செலவே
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்