Tag: புறநானூறு

  • கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்

    புறநானூறு

    கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்
    கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
    எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
    அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
    பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு
    உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்
    அகல்நாட்டு அண்ணல் புகாவே நெருநைப்
    பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி
    ஒருவழிப் பட்டன்று மன்னே இன்றே
    அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை
    உயர்நிலை உலகம் அவன்புக வரி
    நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
    அழுதல் ஆனாக் கண்ணள்
    மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே

    தும்பிசேர் கீரனார்

  • அளிய தாமே சிறுவெள் ளாம்பல்

    புறநானூறு

    அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
    இளையம் ஆகத் தழையா யினவே இனியே
    பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்து
    இன்னா வைகல் உண்ணும்
    அல்லிப் படுஉம் புல் ஆயினவே

    ஒக்கூர் மாசாத்தனார்

  • யானை தந்த முளிமர விறகின்

    புறநானூறு

    யானை தந்த முளிமர விறகின்
    கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
    மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
    மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
    நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
    பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
    தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
    முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
    சிறுநனி தமியள் ஆயினும்
    இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே

    மதுரைப் பேராலவாயர்

  • யங்குப் பெரிது ஆயினும் நோய்அளவு எனைத்தே

    புறநானூறு

    யங்குப் பெரிது ஆயினும் நோய்அளவு எனைத்தே
    உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
    ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
    இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே

    சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

  • பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

    புறநானூறு

    பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
    விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா
    இரவல் மாக்களும்

  • இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்

    புறநானூறு

    இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்
    செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
    தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
    தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
    மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
    உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
    நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக்
    கரையவர் மருளத் திரையகம் பிதிர
    நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
    குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
    அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ-
    தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
    இருமிடை மிடைந்த சிலசொல்
    பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே

    தொடித்தலை விழுத்தண்டினார்

  • ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

    புறநானூறு

    ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
    இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
    வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்
    செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
    முதுகுமெய்ப் புலைத்தி போலத்
    தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
    புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே

    பெரும்பூதனார்

  • நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்

    புறநானூறு

    நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்
    இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
    செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
    மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
    குடப்பால் சில்லுறை போலப்
    படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே

    மாதுரைப் பூதன் இளநாகனார்

  • முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்

    புறநானூறு

    முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
    தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
    நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
    பச்சூன் தின்று பைந்நிணப் பெருத்த
    எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்
    புலம்புக் கனனே புல்அணற் காளை
    ஒருமுறை உண்ணா அளவைப் பெருநிரை
    ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் யார்க்கும்
    தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி
    ஆதரக் கழுமிய துகளன்
    காய்தலும் உண்டு அக் கள்வெய் யோனே

    உலோச்சனார்

  • கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்

    புறநானூறு

    கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
    வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
    ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
    திணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்
    வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
    ஓம்புமின் ஓம்புமின் இவண் ஓம்பாது
    தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
    கன்றுஅமர் கறவை மான
    முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே

    ஒரூஉத்தனார்