Tag: புறநானூறு

  • பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

    புறநானூறு

    பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
    மாமலை பயந்த காமரு மணியும்
    இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
    அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
    ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்
    சான்றோர் பாலர் ஆப
    சாலார் சாலார் பாலர் ஆகுபவே

    கண்ணகனார் நத்தத்தனார்

  • பொய்யா கியரோ பொய்யா கியரோ

    புறநானூறு

    பொய்யா கியரோ பொய்யா கியரோ
    பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
    சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
    பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ
    இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்பூண்
    போர்அடு தானை எவ்வி மார்பின்
    எ·குஉறு விழுப்புண் பல என
    வைகறு விடியல் இயம்பிய குரலே

    வெள்ளெருக்கிலையார்

  • நினைக்கும் காலை மருட்கை உடைத்தே

    புறநானூறு

    நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
    எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
    அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
    தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
    இசைமரபு ஆக நட்புக் கந்தாக
    இனையதோர் காலை ஈங்கு வருதல்
    வருவன் என்ற கோனது பெருமையும்
    அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
    வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
    அதனால் தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
    சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
    அன்னோனை இழந்தஇவ் வுலகம்
    என்னா வதுகொல் அளியது தானே

    பொத்தியார்

  • இல்லா கியரோ காலை மாலை

    புறநானூறு

    இல்லா கியரோ காலை மாலை
    அல்லா கியர் யான் வாழும் நாளே
    நடுகல் பீலி சூட்டி நார்அரி
    சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
    கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
    நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே

    ஔவையார்

  • கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்

    புறநானூறு

    கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
    காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
    வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
    அரிதே தோன்றல் அதற்பட ஒழுகல் என்று
    ஐயம் கொள்ளன்மின் ஆரறி வாளிர்
    இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன்
    புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
    புன்பெயர் கிளக்கும் காலை என் பெயர்
    பேதைச் சோழன் என்னும் சிறந்த
    காதற் கிழமையும் உடையவன் அதன் தலை
    இன்னதோர் காலை நில்லலன்
    இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே

    கோப்பெருஞ் சோழன்

  • எரிபுனக் குறவன் குறையல் அன்ன

    புறநானூறு

    எரிபுனக் குறவன் குறையல் அன்ன
    கரிபுற விறகின் ஈம ஒள்அழல்
    குருகினும் குறுகுக குறுகாது சென்று
    விசும்பஉற நீளினும் நீள்க பசுங்கதிர்
    திங்கள் அன்ன வெண்குடை
    ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே

    ஔவையார்

  • கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்

    புறநானூறு

    கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
    தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
    வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
    ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
    அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
    தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
    பிசிரோன் என்ப என் உயிர்ஓம் புநனே
    செல்வக் காலை நிற்பினும்
    அல்லற் காலை நில்லலன் மன்னே

    கோப்பெருஞ் சோழன்

  • யானை தந்த முளிமர விறகின்

    புறநானூறு

    யானை தந்த முளிமர விறகின்
    கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
    மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
    மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
    நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
    பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
    தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
    முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
    சிறுநனி தமியள் ஆயினும்
    இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே

    மதுரைப் பேராலவாயர்

  • யங்குப் பெரிது ஆயினும் நோய்அளவு எனைத்தே

    புறநானூறு

    யங்குப் பெரிது ஆயினும் நோய்அளவு எனைத்தே
    உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
    ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
    இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே

    சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

  • பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

    புறநானூறு

    பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
    விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா
    இரவல் மாக்களும்