Tag: வெண்பா

  • ஒன்றுநன் குடைய பிறர் குன்றம் என்றும்

    புறநானூறு

    ஒன்றுநன் குடைய பிறர் குன்றம் என்றும்
    இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்
    நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
    தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் அதான்று
    நிறையருந் தானை வேந்தரைத்
    திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே

    மோசிகீரனார்

  • வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ

    புறநானூறு

    வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
    உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்கஎனக்
    கிளக்கும் பாண கேள் இனி நயத்தின்
    பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ
    ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
    இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
    கொண்பெருங்காலத்துக் கிழவன்
    தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே

    மோசிகீரனார்

  • திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்

    புறநானூறு

    திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
    அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
    சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
    அரசர் உழைய ராகவும் புரைதபு
    வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
    யானும்பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்
    உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
    ஈயென இரத்தலோ அரிதே நீ அது
    நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
    எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
    தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
    தண்பல இழிதரும் அருவி நின்
    கொண்டுபெருங்கானம் பாடல் எனக்கு எளிதே

    மோசிகீரனார்

  • மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்

    புறநானூறு

    மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
    இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்
    சுடர்விடு பசும்பூண் சூர்ப்பு அமை முன்கை
    அடுபோர் ஆனா ஆதன் ஓரி
    மாரி வண்கொடை காணிய நன்றும்
    சென்றது மன் எம் கண்ணுளங் கடும்பே
    பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
    வால்நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
    யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்
    பசியார் ஆகல் மாறுகொல் விசிபிணிக்
    கூடுகொள் இன்னியம் கறங்க
    ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே

    வண்பரணர்

  • வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

    புறநானூறு

    வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
    பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
    புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
    கேழற் பன்றி வீழ அயலது
    ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
    வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
    புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
    கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்று இவன்
    விலைவன் போலான் வெறுக்கைநன்கு உடையன்
    ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
    சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
    ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ
    பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
    மண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின்
    கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்
    எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்
    பதலை ஒருகண் பையென இயக்குமின்
    மதலை மாக்கோல் கைவலம் தமின் என்று
    இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
    மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்
    கோவெனப் பெயரிய காலை ஆங்கு அது
    தன்பெயர் ஆகலின் நாணி மற்று யாம்
    நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்
    வேட்டுவர் இல்லை நின் ஒப் போர் என
    வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
    தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு
    ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்
    தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
    பன்மணிக் கு வையொடும் விரைஇக் கொண்ம் எனச்
    சுரத்துஇடை நல்கி யோனே விடர்ச் சிமை
    ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்
    ஓம்பா ஈகை விறல்வெய் யோனே

    வண்பரணர்

  • பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப

    புறநானூறு

    பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
    விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
    கிழவன் சேட்புலம் படரின் இழை அணிந்து
    புன்தலை மடப்பிடி பரிசிலாகப்
    பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
    கண்டீ ரக்கோன் ஆகலின் நன்றும்
    முயங்கல் ஆன்றிசின் யானே பொலந்தேர்
    நன்னன் மருகன் அன்றியும் நீயும்
    முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்கு மொழிப்
    பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை
    அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
    மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே

    பெருந்தலைச் சாத்தனார்

  • சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி

    புறநானூறு

    சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி
    தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
    வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
    பெய்யினும் பெய்யா தாயினும் அருவி
    கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட
    மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
    நீரினும் இனிய சாயல்
    பாரி வேள்பால் பாடினை செலினே

    கபிலர்

  • மாசு விசும்பின் வெண் திங்கள்

    புறநானூறு

    மாசு விசும்பின் வெண் திங்கள்
    மூ வைந்தான் முறை முற்றக்
    கடல் நடுவண் கண்டன்ன என்
    இயம் இசையா மரபு ஏத்திக்
    கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
    பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
    உலகு காக்கும் உயர் கொள்கை
    கேட்டோன் எந்தை என் தெண்கிணைக் குரலே
    கேட்டற் கொண்டும் வேட்கை தண்டாது
    தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
    மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
    _____________________________லவான
    கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி
    நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து
    போ தறியேன் பதிப் பழகவும்
    தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
    பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
    மறவர் மலிந்ததன் ________________
    கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
    இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
    தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்
    துறைதொறும் பிணிக்கும் நல்லூர்
    உறைவின் யாணர் நாடுகிழ வோனே

    கோவூர் கிழார்

  • அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

    புறநானூறு

    அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
    தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
    காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
    ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
    மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை
    செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
    பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன
    மெய்களைந்து இன்னொடு விரைஇ
    மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
    அழிகளிற் படுநர் களியட வைகின்
    பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
    காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
    கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
    செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
    நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்
    கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
    பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
    ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
    அறவர் அறவன் மறவர் மறவன்
    மள்ளர் மள்ளன்தொல்லோர் மருகன்
    இசையிற் கொண்டான் நசையமுது உண்க என
    மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
    வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
    விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
    அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்
    கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
    கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
    பகடே அத்தை யான் வேண்டிவந் தது என
    ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
    ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
    ஊர்தியடு நல்கி யோனே சீர்கொள
    இழுமென இழிதரும் அருவி
    வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே

    ஐயூற் முடவனார்

  • மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர

    புறநானூறு

    மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர
    வகைமாண் நல்லில்
    பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
    பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
    கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க
    இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்
    பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
    வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
    நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப்
    புலியினம் மடிந்த கல்லளை போலத்
    துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
    மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி
    இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
    உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
    தள்ளா நிலையை யாகியர் எமக்கு என
    என்வரவு அறீஇச்
    சிறி திற்குப் பெரிது உவந்து
    விரும்பிய முகத்த னாகி என் அரைத்
    துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன் அரைப்
    புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ
    அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை
    நிழல்காண் தேறல் நிறைய வாக்கி
    யான்உண அருளல் அன்றியும் தான்உண்
    மண்டைய கண்ட மான்வறைக் கருனை
    கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர
    வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
    விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு
    புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்
    உரைசெல அருளி யோனே
    பறைஇசை அருவிப் பாயல் கோவே

    திருத்தாமனார்