Tag: வெண்பா

  • களரி பரந்து கள்ளி போகிப்

    புறநானூறு

    களரி பரந்து கள்ளி போகிப்
    பகலும் கூஉம் கூகையடு பிறழ்பல்
    ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
    அஞ்சுவந் தன்று இம் மஞ்சுபடு முதுகாடு
    நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
    என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
    எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
    மன்பதைக் கெல்லாம் தானாய்த்
    தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே

    தாயங்கண்ணனார்

  • போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்

    புறநானூறு

    போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்
    தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப்
    பறையடு தகைத்த கலப்பையென் முரவுவாய்
    ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
    மன்ற வேம்பின் ஒண்பூ உரைப்பக்
    குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
    அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்
    கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப
    வருகணை வாளி__________ அன்பின்று தலைஇ
    இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை
    வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக்
    குறைத்தலைப் படுபிணன் எதிரப் போர்பு அழித்து
    யானை எருத்தின் வாள்மட லோச்சி
    அதரி திரித்த ஆள் உகு கடாவின்
    மதியத் தன்ன என் விசியுறு தடாரி
    அகன்கண் அதிர ஆகுளி தொடாலின்
    பணைமருள் நெடுந்தாள் பல்பிணர்த் தடக்கைப்
    புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும
    களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி
    விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள்
    குடர்த்தலை மாலை சூடி உணத்தின
    ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து
    வயங்குபன் மீனினும் வாழியர் பல என
    உருகெழு பேய்மகள் அயரக்
    குருதித்துக ளாடிய களம்கிழ வோயே

    கல்லாடனார்

  • மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்

    புறநானூறு

    மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
    நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
    ஊரது நிலைமையும் இதுவே
    _____________________________

  • வி நாரும் போழும் செய்துண்டு ஓராங்குப்

    புறநானூறு

    _____________________________________வி
    நாரும் போழும் செய்துண்டு ஓராங்குப்
    பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு
    ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
    வேர்உழந்து உலறி மருங்கு செத்து ஒழியவந்து
    அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
    உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
    பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
    கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை
    வரிமரல் திரங்கிய கானம் பிற்படப்
    பழுமரம் உள்ளிய பறவை போல
    ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
    துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
    விளைந்த செழுங்குரல் அரிந்து கால் குவித்துப்
    படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி
    எருதுகளி றாக வாள்மடல் ஓச்சி
    அதரி திரித்த ஆளுகு கடாவின்
    அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
    வெந்திறல் வியன்களம் பொலிக என்று ஏத்தி
    இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின்
    வரைமருள் முகவைக்கு வந்தனென் பெரும
    வடிநவில் எஃகம் பாய்ந்தெனக் கிடந்த
    தொடியுடைத் தடக்கை ஓச்சி வெருவார்
    இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
    அழுகுரற் பேய்மகள் அயரக் கழுகொடு
    செஞ்செவி எருவை திரிதரும்
    அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா

    புறநானூறு

    அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
    நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
    புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
    வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
    கயலார் நாரை உகைத்த வாளை
    புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
    ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
    சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
    வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
    மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே

    பரணர்

  • இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்

    புறநானூறு

    இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்
    கருங்கை யானை கொண்மூவாக
    நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
    வாள்மின் நாக வயங்குடிப்பு அமைந்த
    குருதிப் பலிய முரசுமுழக் காக
    அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
    வெவ் விசைப் புரவி வீசுவளி யாக
    விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
    கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
    ஈரச் செறுவயின் தேர்ஏ ராக
    விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
    செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
    பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
    விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
    பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு
    கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
    பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
    பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள
    தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
    வேய்வை காணா விருந்தின் போர்வை
    அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
    பாடி வந்திசின் பெரும பாடான்று
    எழிலி தோயும் இமிழிசை யருவிப்
    பொன்னுடை நெடுங்கோட்டு இமையத் தன்ன
    ஓடைநுதல ஒல்குதல் அறியாத்
    துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
    வேழ முகவை நல்குமதி
    தாழா ஈகைத் தகை வெய் யோயே

    பரணர்

  • களிறு முகந்து பெயர்குவம் எனினே

    புறநானூறு

    களிறு முகந்து பெயர்குவம் எனினே
    ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்
    கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன
    கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே
    கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி
    நெடும்பீடு அழிந்து நிலம்சேர்ந் தனவே
    கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே
    மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி
    வளிவழக் கறுத்த வங்கம் போலக்
    குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே ஆங்க
    முகவை இன்மையின் உகவை இன்றி
    இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து
    ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ
    கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
    தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்
    பாடி வந்த தெல்லாம் கோடியர்
    முழவுமருள் திருமணி மிடைந்தநின்
    அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே

    கழாத் தலையார்

  • நாகத் தன்ன பாகார் மண்டிலம்

    புறநானூறு

    நாகத் தன்ன பாகார் மண்டிலம்
    தமவே யாயினும் தம்மொடு செல்லா
    வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
    ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
    பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
    பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
    நாரறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
    இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
    வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
    வாழச் செய்த நல்வினை அல்லது
    ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை
    ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
    முத்தீப் புரையக் காண்தக இருந்த
    கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்
    யான் அறி அளவையோ இவ்வே வானத்து
    வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்
    பரந்து இயங்கும் மாமழை உறையினும்
    உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக நும் நாளே

    ஔவையார்

  • விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்

    புறநானூறு

    விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
    ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக
    அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப
    ஒருதா மாகிய பெருமை யோரும்
    தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே
    அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால்
    _______________________ உரைப்பக் கேண்மதி
    நின் ஊற்றம் பிறர் அறியாது
    பிறர் கூறிய மொழி தெரியா
    ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி
    இரவின் எல்லை வருவது நாடி
    உரை ________________________________
    உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்
    செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ
    அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப
    கெடல் அருந் திருவ_______________
    மடை வேண்டுநர்க்கு இடை அருகாது
    அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
    விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப
    நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்
    காவு தோறும் ___________________
    மடங்கல் உண்மை மாயமோ அன்றே

    கோதமனார்

  • மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக

    புறநானூறு

    மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
    இயங்கிய இருசுடர் கண் எனப் பெயரிய
    வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
    வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
    பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்
    பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
    முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
    விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
    உள்ளேன் வாழியர் யான் எனப் பன்மாண்
    நிலமகள் அழுத காஞ்சியும்
    உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே

    மார்க்கண்டேயனார்