Tag: வெண்பா

  • ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த

    புறநானூறு

    ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
    பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்
    ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்
    தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்
    தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை
    வினவல் ஆனா வெல்போர் அண்ணல்
    யார்மகள் என்போய் கூறக் கேள் இனிக்
    குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
    நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
    வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்
    தொல்குடி மன்னன் மகளே முன்நாள்
    கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
    __________________________________
    ______உழக்குக் குருதி ஓட்டிக்
    கதுவாய் போகிய நுதிவாய் எஃகமொடு
    பஞ்சியும் களையாப் புண்ணர்
    அஞ்சுதகவு உடையர் இவள் தன்னை மாரே

    காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

  • வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே

    புறநானூறு

    வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
    கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்
    ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
    களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
    ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே
    இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
    அன்னோ பெரும்பே துற்றன்று இவ் வருங்கடி மூதூர்
    அறன்இலன் மன்ற தானே விறன்மலை
    வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
    முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
    தகைவளர்த்து எடுத்த நகையடு
    பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே

    பரணர்

  • தேஎங் கொண்ட வெண்மண் டையான்

    புறநானூறு

    தேஎங் கொண்ட வெண்மண் டையான்
    வீ_____________ கறக்குந்து
    அவல் வகுத்த பசுங் குடையான்
    புதன் முல்லைப் பூப்பறிக் குந்து
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
    குன்றுஏறிப் புனல் பாயின்
    புறவாயால் புனல்வரை யுந்து
    ______________நொடை நறவின்
    மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
    உறந்தை அன்ன உரைசால் நன்கலம்
    கொடுப்பவும் கொளாஅ னெ____
    ______ர்தந்த நாகிள வேங்கையின்
    கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
    மாக்கண் மலர்ந்த முலையள் தன்னையும்
    சிறுகோல் உளையும் புரவி
    ________________________யமரே

    பரணர்

  • அடலருந் துப்பின்

    புறநானூறு

    அடலருந் துப்பின் _______________
    _____________ குருந்தே முல்லை யென்று
    இந்நான் கல்லது பூவும் இல்லை
    கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையடு
    இந்நான் கல்லது உணாவும் இல்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
    இந்நான் கல்லது குடியும் இல்லை
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
    கல்லே பரவின் அல்லது
    நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

    மாங்குடி கிழார்

  • படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்

    புறநானூறு

    படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்
    கொடிநுடங்கு மிசைய தேரும் மாவும்
    படைஅமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
    கடல்கண் டன்ன கண்அகன் தானை
    வென்றுஎறி முரசின் வேந்தர் என்றும்
    வண்கை எயினன் வாகை அன்ன
    இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்
    என்ஆ வதுகொல் தானே தெண்ணீர்ப்
    பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
    தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின்
    காமரு காஞ்சித் துஞ்சும்
    ஏமம்சால் சிறப்பின் இப் பணைநல் லூரே

    மதுரைப் படைமங்க மன்னியார்

  • காகரு பழனக் கண்பின் அன்ன

    புறநானூறு

    காகரு பழனக் கண்பின் அன்ன
    தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
    புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
    படப்புஒடுங் கும்மே ______ பின்பு _______
    _______________னூரே மனையோள்
    பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
    ஊணொலி அரவமொடு கைதூ வாளே
    உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
    பொலம் __________________ப்
    பரிசில் பரிசிலர்க்கு ஈய
    உரவேற் காளையும் கைதூ வானே

    மதுரைத் தமிழக் கூத்தனார்

  • விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்

    புறநானூறு

    விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
    ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக
    அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப
    ஒருதா மாகிய பெருமை யோரும்
    தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே
    அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால்
    _______________________ உரைப்பக் கேண்மதி
    நின் ஊற்றம் பிறர் அறியாது
    பிறர் கூறிய மொழி தெரியா
    ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி
    இரவின் எல்லை வருவது நாடி
    உரை ________________________________
    உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்
    செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ
    அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப
    கெடல் அருந் திருவ_______________
    மடை வேண்டுநர்க்கு இடை அருகாது
    அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
    விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப
    நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்
    காவு தோறும் ___________________
    மடங்கல் உண்மை மாயமோ அன்றே

    கோதமனார்

  • மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக

    புறநானூறு

    மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
    இயங்கிய இருசுடர் கண் எனப் பெயரிய
    வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
    வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
    பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்
    பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
    முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
    விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
    உள்ளேன் வாழியர் யான் எனப் பன்மாண்
    நிலமகள் அழுத காஞ்சியும்
    உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே

    மார்க்கண்டேயனார்

  • வாடா மாலை பாடினி அணியப்

    புறநானூறு

    வாடா மாலை பாடினி அணியப்
    பாணன் சென்னிக் கேணி பூவா
    எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க
    மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
    காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
    நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
    உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும்
    மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே
    அரிய வாகலும் உரிய பெரும
    நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்
    முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
    கூகைக் கோழி ஆனாத்
    தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே

    கூகைக் கோரியார்

  • இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்

    புறநானூறு

    இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
    உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
    தாமே ஆண்ட ஏமம் காவலர்
    இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
    காடுபதி யாகப் போகித் தத்தம்
    நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
    அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது
    உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
    மடங்கல் உண்மை மாயமோ அன்றே
    கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
    வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
    உப்பிலாஅ அவிப் புழுக்கல்
    கைக் கொண்டு பிறக்கு நோக்காது
    இழி பிறப்பினோன் ஈயப் பெற்று
    நிலங்கல னாக இலங்குபலி மிசையும்
    இன்னா வைகல் வாரா முன்னே
    செய்ந்நீ முன்னிய வினையே
    முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே

    ஐயாதிச் சிறுவெண்டேரையார்