Tag: வெண்பா

  • மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்

    புறநானூறு

    மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்
    கேட்பின் அல்லது காண்பறி யலையே
    காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்
    விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்
    கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
    மாரி யன்ன வண்மைத்
    தேர்வேள் ஆயைக் காணிய சென்மே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

    புறநானூறு

    போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்
    உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்
    ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
    வேலே குறும்படைந்த அரண் கடந்தவர்
    நறுங் கள்ளின் நாடு நைத்தலின்
    சுரை தழீஇய இருங் காழொடு
    மடை கலங்கி நிலைதிரிந் தனவே
    களிறே எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து அவர்
    குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்
    பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே
    மாவே பரந்தொருங்கு மலைந்த மறவர்
    பொலம் பைந்தார் கெடப் பரிதலின்
    களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே
    அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப்
    பொலந் தும்பைக் கழல் பாண்டில்
    கணை பொருத துளைத்தோ லன்னே
    ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடந்தாள்
    பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
    நுமக்குஉரித்து ஆகல் வேண்டின் சென்றவற்கு
    இறுக்கல் வேண்டும் திறையே மறிப்பின்
    ஒல்வான் அல்லன் வெல்போ ரான் எனச்
    சொல்லவும் தேறீர் ஆயின் மெல்லியல்
    கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
    குறுந்தொடி மகளிர் தோள்விடல்
    இறும்பூது அன்று அஃது அறிந்துஆ டுமினே

    ஔவையார்

  • ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

    புறநானூறு

    ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
    ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
    பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
    கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
    பிறைநுதல் விளங்கு மொருகண் போல
    வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
    கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
    நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
    நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
    அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
    அதனால், நமரெனக் கோல்கோடாது
    பிறரெனக் குணங்கொல்லாது
    ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
    திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
    வானத் தன்ன வண்மையு மூன்றும்
    உடையை யாகி யில்லோர் கையற
    நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
    வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
    நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
    டுவளி தொகுப்ப வீண்டிய
    வடுவா ழெக்கர் மணலினும் பலவே

    மருதனிளநாகனார்

  • இன்று செலினுந் தருமே சிறுவரை

    புறநானூறு

    இன்று செலினுந் தருமே சிறுவரை
    நின்று செலினுந் தருமே பின்னும்
    முன்னே தந்தனென் என்னாது துன்னி
    வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
    யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
    தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
    அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்
    இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
    களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
    அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
    பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே
    அன்னன் ஆகலின் எந்தை உள்ளடி
    முள்ளும் நோவ உற்றாக தில்ல
    ஈவோர் அரியஇவ் உலகத்து
    வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே

    காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

  • இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்

    புறநானூறு

    இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
    புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
    நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய
    மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
    அருமுனை இருக்கைத்து ஆயினும் வரிமிடற்று
    அரவுஉறை புற்றத்து அற்றே நாளும்
    புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
    அருகாது ஈயும் வண்மை
    உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

    மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

  • டைமுதல் புறவு சேர்ந்திருந்த

    புறநானூறு

    ______டைமுதல் புறவு சேர்ந்திருந்த
    புன்புலச் சீறூர் நெல்விளை யாதே
    வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
    இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன
    ________டமைந் தனனே
    அன்னன் ஆயினும் பாண நன்றும்
    வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட___
    களவுப் புளியன்ன விளை_____
    _________வாடூன் கொழுங்குறை
    கொய்குரல் அரிசியடு நெய்பெய்து அட்டுத்
    துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
    உண்டு இனி திருந்த பின்_______
    ___________தருகுவன் மாதோ
    தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
    முயல்வந்து கறிக்கும் முன்றில்
    சீறூர் மன்னனைப் பாடினை செலினே

  • ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்

    புறநானூறு

    ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்
    கவிகை மண்ணாள் செல்வ ராயினும்
    வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்
    வரலதோறு அகம் மலர
    ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்
    பாரி பறம்பின் பனிச்சுனை போலக்
    காண்டற்கு அரியளாகி மாண்ட
    பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
    துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
    அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய
    கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
    மனைச்செறிந் தனளே வாணுதல் இனியே
    அற்றன் றாகலின் தெற்றெனப் போற்றிக்
    காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும்
    கடுங்கண் யானை காப்பனர் அன்றி
    வருத லானார் வேந்தர் தன்னையர்
    பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
    குருதி பற்றிய வெருவரு தலையர்
    மற்றுஇவர் மறனும் இற்றால் தெற்றென
    யாரா குவர்கொல் தாமே நேரிழை
    உருத்த பல்சுணங்கு அணிந்த
    மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே

    கபிலர்

  • ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த

    புறநானூறு

    ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
    பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்
    ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்
    தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்
    தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை
    வினவல் ஆனா வெல்போர் அண்ணல்
    யார்மகள் என்போய் கூறக் கேள் இனிக்
    குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
    நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
    வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்
    தொல்குடி மன்னன் மகளே முன்நாள்
    கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
    __________________________________
    ______உழக்குக் குருதி ஓட்டிக்
    கதுவாய் போகிய நுதிவாய் எஃகமொடு
    பஞ்சியும் களையாப் புண்ணர்
    அஞ்சுதகவு உடையர் இவள் தன்னை மாரே

    காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

  • வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே

    புறநானூறு

    வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
    கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்
    ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
    களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
    ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே
    இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
    அன்னோ பெரும்பே துற்றன்று இவ் வருங்கடி மூதூர்
    அறன்இலன் மன்ற தானே விறன்மலை
    வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
    முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
    தகைவளர்த்து எடுத்த நகையடு
    பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே

    பரணர்

  • தேஎங் கொண்ட வெண்மண் டையான்

    புறநானூறு

    தேஎங் கொண்ட வெண்மண் டையான்
    வீ_____________ கறக்குந்து
    அவல் வகுத்த பசுங் குடையான்
    புதன் முல்லைப் பூப்பறிக் குந்து
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
    குன்றுஏறிப் புனல் பாயின்
    புறவாயால் புனல்வரை யுந்து
    ______________நொடை நறவின்
    மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
    உறந்தை அன்ன உரைசால் நன்கலம்
    கொடுப்பவும் கொளாஅ னெ____
    ______ர்தந்த நாகிள வேங்கையின்
    கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
    மாக்கண் மலர்ந்த முலையள் தன்னையும்
    சிறுகோல் உளையும் புரவி
    ________________________யமரே

    பரணர்