Tag: வெண்பா

  • போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

    புறநானூறு

    போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்
    உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்
    ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
    வேலே குறும்படைந்த அரண் கடந்தவர்
    நறுங் கள்ளின் நாடு நைத்தலின்
    சுரை தழீஇய இருங் காழொடு
    மடை கலங்கி நிலைதிரிந் தனவே
    களிறே எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து அவர்
    குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்
    பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே
    மாவே பரந்தொருங்கு மலைந்த மறவர்
    பொலம் பைந்தார் கெடப் பரிதலின்
    களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே
    அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப்
    பொலந் தும்பைக் கழல் பாண்டில்
    கணை பொருத துளைத்தோ லன்னே
    ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடந்தாள்
    பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
    நுமக்குஉரித்து ஆகல் வேண்டின் சென்றவற்கு
    இறுக்கல் வேண்டும் திறையே மறிப்பின்
    ஒல்வான் அல்லன் வெல்போ ரான் எனச்
    சொல்லவும் தேறீர் ஆயின் மெல்லியல்
    கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
    குறுந்தொடி மகளிர் தோள்விடல்
    இறும்பூது அன்று அஃது அறிந்துஆ டுமினே

    ஔவையார்

  • ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

    புறநானூறு

    ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
    ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
    பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
    கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
    பிறைநுதல் விளங்கு மொருகண் போல
    வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
    கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
    நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
    நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
    அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
    அதனால், நமரெனக் கோல்கோடாது
    பிறரெனக் குணங்கொல்லாது
    ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
    திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
    வானத் தன்ன வண்மையு மூன்றும்
    உடையை யாகி யில்லோர் கையற
    நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
    வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
    நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
    டுவளி தொகுப்ப வீண்டிய
    வடுவா ழெக்கர் மணலினும் பலவே

    மருதனிளநாகனார்

  • இன்று செலினுந் தருமே சிறுவரை

    புறநானூறு

    இன்று செலினுந் தருமே சிறுவரை
    நின்று செலினுந் தருமே பின்னும்
    முன்னே தந்தனென் என்னாது துன்னி
    வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
    யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
    தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
    அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்
    இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
    களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
    அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
    பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே
    அன்னன் ஆகலின் எந்தை உள்ளடி
    முள்ளும் நோவ உற்றாக தில்ல
    ஈவோர் அரியஇவ் உலகத்து
    வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே

    காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

  • இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்

    புறநானூறு

    இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
    புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
    நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய
    மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
    அருமுனை இருக்கைத்து ஆயினும் வரிமிடற்று
    அரவுஉறை புற்றத்து அற்றே நாளும்
    புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
    அருகாது ஈயும் வண்மை
    உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

    மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

  • டைமுதல் புறவு சேர்ந்திருந்த

    புறநானூறு

    ______டைமுதல் புறவு சேர்ந்திருந்த
    புன்புலச் சீறூர் நெல்விளை யாதே
    வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
    இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன
    ________டமைந் தனனே
    அன்னன் ஆயினும் பாண நன்றும்
    வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட___
    களவுப் புளியன்ன விளை_____
    _________வாடூன் கொழுங்குறை
    கொய்குரல் அரிசியடு நெய்பெய்து அட்டுத்
    துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
    உண்டு இனி திருந்த பின்_______
    ___________தருகுவன் மாதோ
    தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
    முயல்வந்து கறிக்கும் முன்றில்
    சீறூர் மன்னனைப் பாடினை செலினே

  • எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற

    புறநானூறு

    எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற
    சில்விளை வரகின் புல்லென் குப்பை
    தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
    பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்
    ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
    சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
    வரகுடன் இரக்கும் நெடுந்தகை
    அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே

  • ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்

    புறநானூறு

    ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
    இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
    உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
    சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
    பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்
    கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
    அருமிளை இருக்கை யதுவே மனைவியும்
    வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது
    படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
    விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
    யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
    வருவிருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
    அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
    அண்ணல் யானை அணிந்த
    பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே

    தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

  • களிறுநீ றாடிய விடுநில மருங்கின்

    புறநானூறு

    களிறுநீ றாடிய விடுநில மருங்கின்
    வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்
    குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்
    செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
    முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை
    முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
    உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
    சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்
    கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
    மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
    அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
    கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
    அருமிளை இருக்கை யதுவே வென்வேல்ஊரே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்

    புறநானூறு

    வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
    புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்
    வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
    சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
    ஊக நுண்கோற் செறித்த அம்பின்
    வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்
    பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
    புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்
    குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த
    வெண்வாழ் தாய வண்காற் பந்தர்
    இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
    பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
    வலம்படு தானை வேந்தற்கு
    உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே

    ஆலத்தூர் கிழார்

  • புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்

    புறநானூறு

    புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
    சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
    கா ____________________________க்கு
    உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
    வெள்வேல் ஆவம்ஆயின் ஒள் வாள்
    கறையடி யானைக்கு அல்லது
    உறைகழிப் பறியாவேலோன் ஊரே