Tag: வெண்பா

  • வயலைக் கொடியின் வாடிய மருங்கின்

    புறநானூறு

    வயலைக் கொடியின் வாடிய மருங்கின்
    உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
    எல்லி வந்து நில்லாது புக்குச்
    சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
    ஏணியும் சீப்பும் மாற்றி
    மாண்வினை யானையும் மணிகளைந் தனவே

    மதுரை வேளாசான்

  • கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி

    புறநானூறு

    கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
    நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
    வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
    பண்ணற்கு விரைதி நீயேநெருநை
    எம்முன் தப்பியோன் தம்பியடு ஓராங்கு
    நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்
    புன்வயிறு அருத்தலும் செல்லான் வன்மான்
    கடவும் என்ப பெரிதே அது கேட்டு
    வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
    இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
    இரண்டா காது அவன் கூறியது எனவே

    அரிசில்கிழார்

  • நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ

    புறநானூறு

    நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ
    உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
    எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
    வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
    ஆட்டிக் காணிய வருமே நெருநை
    உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
    கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து அவர்
    கயந்தலை மடப்பிடி புலம்ப
    இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே

    எருமை வெளியனார்

  • வெடிவேய் கொள்வது போல ஓடித்

    புறநானூறு

    வெடிவேய் கொள்வது போல ஓடித்
    தாவுபு உகளும் மாவே பூவே
    விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
    நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
    ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
    கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய
    நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்
    நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
    வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
    விண்ணிவர் விசும்பின் மீனும்
    தண்பெயல் உறையும் உறையாற் றாவே

    காமக் கண்ணியார்

  • பல் சான்றீரே பல் சான்றீரே

    புறநானூறு

    பல் சான்றீரே பல் சான்றீரே
    குமரி மகளிர் கூந்தல் புரைய
    அமரின் இட்ட அருமுள் வேலிக்
    கல்லென் பாசறைப் பல்சான் றீரே
    முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்
    ஒளிறு ஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்
    எனைநாள் தங்கும்நும் போரே அனைநாள்
    எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
    எதிர்சென்று எறிதலும் செல்லான் அதனால்
    அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே
    பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண்
    நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
    வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
    எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
    வேந்தூர் யானைக்கு அல்லது
    ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே

    ஆவூர் மூலங்கிழார்

  • வென்வேல் நது

    புறநானூறு

    வென்வேல் ___________________ நது
    முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
    அதளுண் டாயினும் பாய்உண்டு ஆயினும்
    யாதுண்டு ஆயினும் கொடுமின் வல்லே
    வேட்கை மீளப_______________
    ____________கும் எமக்கும் பிறர்க்கும்
    யார்க்கும் ஈய்ந்து துயில்ஏற் பினனே

    மவேம்பற்றூர்க் குமரனார்

  • தோல்தா தோல்தா என்றி தோலொடு

    புறநானூறு

    தோல்தா தோல்தா என்றி தோலொடு
    துறுகல் மறையினும் உய்குவை போலாய்
    நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேரூர் அட்ட கள்ளிற்கு
    ஓர் இல் கோயின் தேருமால் நின்ன

    அரிசில் கிழார்

  • கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்

    புறநானூறு

    கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
    காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
    நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே
    அவன் எம் இறைவன் யாம்அவன் பாணர்
    நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
    இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
    கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் இதுகொண்டு
    ஈவது இலாளன் என்னாது நீயும்
    வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்
    கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்
    சென்று வாய் சிவந்துமேல் வருக
    சிறுகண் யானை வேந்து விழுமுறவே

    மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

  • பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

    புறநானூறு

    பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
    உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
    கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
    நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
    தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
    அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
    கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

    பொன் முடியார்

  • உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்

    புறநானூறு

    உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்
    கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்
    மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி
    இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
    தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றதன்
    கான்றுபடு கனைஎரி போலத்
    தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்

    ஔவையார்