Tag: வெண்பா

  • சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்

    புறநானூறு

    சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்
    தூவெள் அறுவை மாயோற் குறுகி
    இரும்புள் பூசல் ஓம்புமின் யானும்
    விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
    என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே
    கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
    மணிமருள் மாலை சூட்டி அவன் தலை
    ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே

    நெடுங்கழுத்துப் பரணர்

  • இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்

    புறநானூறு

    இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்
    இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்
    நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
    எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
    அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே
    மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
    உறைப்புழி ஓலை போல
    மறைக்குவன் பெரும நிற் குறித்துவரு வேலே

    ஔவையார்

  • ஈரச் செவ்வி உதவின ஆயினும்

    புறநானூறு

    ஈரச் செவ்வி உதவின ஆயினும்
    பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி
    வீறுவீறு ஆயும் உழவன் போலப்
    பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
    மூதி லாளர் உள்ளும் காதலின்
    தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
    இவற்கு ஈக என்னும் அதுவும்அன் றிசினே
    கேட்டியோ வாழி பாண பாசறைப்
    பூக்கோள் இன்று என்று அறையும்
    மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே

    கழாத்தலையார்

  • மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்

    புறநானூறு

    மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
    அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து
    வென்றதன் பச்சை சீவாது போர்த்த
    திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க
    ஆர்அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர
    நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து
    அருகுகை மன்ற
    குருதியடு துயல்வரும் மார்பின்
    முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே

    கழாத்தலையார்

  • துடி எறியும் புலைய

    புறநானூறு

    துடி எறியும் புலைய
    எறிகோல் கொள்ளும் இழிசின
    கால மாரியின் அம்பு தைப்பினும்
    வயல் கெண்டையின் வேல் பிறழினும்
    பொலம்புனை ஓடை அண்ணல் யானை
    இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
    ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
    நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
    நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
    தண்ணடை பெறுதல் யாவது படினே
    மாசில் மகளிர் மன்றல் நன்றும்
    உயர்நிலை உலகத்து நுகர்ப அதனால்
    வம்ப வேந்தன் தானை
    இம்பர் நின்றும் காண்டிரோ வரவே

    சாத்தந்தையார்

  • வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்

    புறநானூறு

    வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
    தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
    பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
    கால்வழி கட்டிலிற் கிடப்பித்
    தூவெள் அறுவை போர்ப்பித் திலதே

    ஔவையார்

  • பல் சான்றீரே பல் சான்றீரே

    புறநானூறு

    பல் சான்றீரே பல் சான்றீரே
    குமரி மகளிர் கூந்தல் புரைய
    அமரின் இட்ட அருமுள் வேலிக்
    கல்லென் பாசறைப் பல்சான் றீரே
    முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்
    ஒளிறு ஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்
    எனைநாள் தங்கும்நும் போரே அனைநாள்
    எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
    எதிர்சென்று எறிதலும் செல்லான் அதனால்
    அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே
    பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண்
    நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
    வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
    எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
    வேந்தூர் யானைக்கு அல்லது
    ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே

    ஆவூர் மூலங்கிழார்

  • வென்வேல் நது

    புறநானூறு

    வென்வேல் ___________________ நது
    முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
    அதளுண் டாயினும் பாய்உண்டு ஆயினும்
    யாதுண்டு ஆயினும் கொடுமின் வல்லே
    வேட்கை மீளப_______________
    ____________கும் எமக்கும் பிறர்க்கும்
    யார்க்கும் ஈய்ந்து துயில்ஏற் பினனே

    மவேம்பற்றூர்க் குமரனார்

  • தோல்தா தோல்தா என்றி தோலொடு

    புறநானூறு

    தோல்தா தோல்தா என்றி தோலொடு
    துறுகல் மறையினும் உய்குவை போலாய்
    நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேரூர் அட்ட கள்ளிற்கு
    ஓர் இல் கோயின் தேருமால் நின்ன

    அரிசில் கிழார்

  • கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்

    புறநானூறு

    கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
    காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
    நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே
    அவன் எம் இறைவன் யாம்அவன் பாணர்
    நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
    இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
    கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் இதுகொண்டு
    ஈவது இலாளன் என்னாது நீயும்
    வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்
    கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்
    சென்று வாய் சிவந்துமேல் வருக
    சிறுகண் யானை வேந்து விழுமுறவே

    மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்