புறநானூறு
கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை
யானை எறிந்து களத்துஒழிந் தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே
ஒக்கூர் மாசாத்தியார்