Tag: வெண்பா

  • கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்

    புறநானூறு

    கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
    காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
    வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
    அரிதே தோன்றல் அதற்பட ஒழுகல் என்று
    ஐயம் கொள்ளன்மின் ஆரறி வாளிர்
    இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன்
    புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
    புன்பெயர் கிளக்கும் காலை என் பெயர்
    பேதைச் சோழன் என்னும் சிறந்த
    காதற் கிழமையும் உடையவன் அதன் தலை
    இன்னதோர் காலை நில்லலன்
    இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே

    கோப்பெருஞ் சோழன்

  • எரிபுனக் குறவன் குறையல் அன்ன

    புறநானூறு

    எரிபுனக் குறவன் குறையல் அன்ன
    கரிபுற விறகின் ஈம ஒள்அழல்
    குருகினும் குறுகுக குறுகாது சென்று
    விசும்பஉற நீளினும் நீள்க பசுங்கதிர்
    திங்கள் அன்ன வெண்குடை
    ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே

    ஔவையார்

  • கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்

    புறநானூறு

    கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
    தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
    வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
    ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
    அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
    தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
    பிசிரோன் என்ப என் உயிர்ஓம் புநனே
    செல்வக் காலை நிற்பினும்
    அல்லற் காலை நில்லலன் மன்னே

    கோப்பெருஞ் சோழன்

  • கலஞ்செய் கோவே கலங்செய் கோவே

    புறநானூறு

    கலஞ்செய் கோவே கலங்செய் கோவே
    இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
    அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை
    நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
    அளியை நீயே யாங்கு ஆகுவை கொல்
    நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
    புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை
    விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
    சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
    கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
    தேவர் உலகம் எய்தினன் ஆதலின்
    அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
    வனைதல் வேட்டனை அயின் எனையதூஉம்
    இருநிலம் திகிரியாப் பெருமலை
    மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே

    ஐயூர் முடவனார்

  • கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்

    புறநானூறு

    கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்
    வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
    களம்மலி குப்பை காப்பில வைகவும்
    விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்
    வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்
    பொய்யா எழினி பொருதுகளம் சேர
    ஈன்றோர் நீத்த குழவி போலத்
    தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
    கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
    நோய் உழந்து வைகிய உலகிலும் மிக நனி
    நீ இழந் தனையே அறனில் கூற்றம்
    வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்
    வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்
    நேரார் பல்லுயிர் பருகி
    ஆர்குவை மன்னோ அவன் அமர்அடு களத்தே

    அரிசில் கிழார்

  • ஆடு இயல் அழல் குட்டத்து

    புறநானூறு

    ஆடு இயல் அழல் குட்டத்து
    ஆர் இருள் அரை இரவில்
    முடப் பனையத்து வேர் முதலாக்
    கடைக் குளத்துக் கயம் காயப்
    பங்குனி உயர் அழுவத்துத்
    தலை நாள்மீன் நிலை திரிய
    நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்
    தொல் நாள்மீன் துறை படியப்
    பாசிச் செல்லாது ஊசித் துன்னாது
    அளக்கர்த் திணை விளக்காகக்
    கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
    ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே
    அதுகண்டு யாமும்பிறரும் பல்வேறு இரவலர்
    பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
    நோயிலன் ஆயின் நன்றுமன் தில் லென
    அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
    அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே
    மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்
    திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
    காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
    கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்
    மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
    ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்
    தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-
    பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
    அளந்து கொடை அறியா ஈகை
    மணிவரை அன்ன மாஅ யோனே

    கூடலூர் கிழார்

  • நனிபே தையே நயனில் கூற்றம்

    புறநானூறு

    நனிபே தையே நயனில் கூற்றம்
    விரகுஇன் மையின் வித்துஅட்டு உண்டனை
    இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்
    ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்
    குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய
    நாளும் ஆனான் கடந்துஅட்டு என்றும் நின்
    வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
    நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
    வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
    இனையோற் கொண்டனை ஆயின்
    இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே

    ஆடுதுறை மாசாத்தனார்

  • இளையோர் சூடார் வளையோர் கொய்யார்

    புறநானூறு

    இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
    நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
    பாணன் சூடான் பாடினி அணியாள்
    ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
    வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
    முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

    குடவாயிற் தீரத்தனார்

  • திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்

    புறநானூறு

    திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
    அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
    வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
    போர்ப்புறு முரசும் கறங்க
    ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்

    புறநானூறு

    ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்
    வாடா யாணர் நாடும் ஊரும்
    பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
    கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
    காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
    மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்
    பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
    சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்
    கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
    ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது
    புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
    கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
    வாடிய பசியர் ஆகிப் பிறர்
    நாடுபடு செலவினர் ஆயினர் இனியே

    குட்டுவன் கீரனார்