Tag: வெண்பா

  • பொய்கை நாரை போர்வில் சேக்கும்

    புறநானூறு

    பொய்கை நாரை போர்வில் சேக்கும்
    நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்
    கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்
    அகல் அடை அரியல் மாந்திக் தெண்கடல்
    படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
    மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந
    பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகத்து
    பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
    பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
    பெறாது பெயரும் புள்ளினம் போல நின்
    நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலென்
    வறுவியேன் பெயர்கோ வாள்மேம் படுந
    ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்
    நோயிலை ஆகுமதி பெரும நம்முள்
    குறுநணி காண்குவ தாக நாளும்
    நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்
    தெரியிழை அன்ன மார்பின்
    செருவெம் சேஎய் நின் மகிழ்இரு க்கையே

    பெருந்தலைச் சாத்தனார்

  • குன்றும் மலையும் பலபின் ஒழிய

    புறநானூறு

    குன்றும் மலையும் பலபின் ஒழிய
    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
    நின்ற என்நயந்து அருளி ஈது கொண்டு
    ஈங்கனம் செல்க தான் என என்னை
    யாங்குஅறிந் தனனோ தாங்கரும் காவலன்
    காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
    வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
    தினை அனைத்து ஆயினும் இனிதுஅவர்
    துணை அளவு அறிந்து நல்கினர் விடினே

    பெருஞ்சித்திரனார்

  • எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ

    புறநானூறு

    எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ
    பருகு அன்ன வேட்கை இல்அழி
    அருகிற் கண்டும் அறியார் போல
    அகம்நக வாரா முகன்அழி பரிசில்
    தாள்இலாளர் வேளார் அல்லர்
    வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
    பெரிதே உலகம் பேணுநர் பலரே
    மீளி முன்பின் ஆளி போல
    உள்ளம் உள்அவிந்து அடங்காது வெள்ளென
    நோவா தோன்வயின் திரங்கி
    வாயா வன்கனிக்கு உலமரு வோரே

    பெருஞ்சித்திரனார்

  • வாயி லோயே வாயி லோயே

    புறநானூறு

    வாயி லோயே வாயி லோயே
    வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்
    உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
    வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
    பரிசிலர்க்கு அடையா வாயி லோயே
    கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
    தன்அறி யலன்கோல் என்னறி யலன்கொல்
    அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென
    வறுந்தலை உலகமும் அன்றே அதனால்
    காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
    மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
    மழுவுடைக் காட்டகத்து அற்றே
    எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

    ஔவையார்

  • முற்றிய திருவின் மூவர் ஆயினும்

    புறநானூறு

    முற்றிய திருவின் மூவர் ஆயினும்
    பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே
    விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
    உறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்
    தாளுளம் தபுத்த வாள்மிகு தானை
    வெள்வீ வேலிக் கோடைப் பொருந
    சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
    மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
    நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக
    ஆர்கலி யாணர்த் தரீஇய கால் வீழ்த்துக்
    கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
    நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு
    ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
    களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே

    பெருந்தலைச் சாத்தனார்

  • ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்

    புறநானூறு

    ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
    கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
    கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
    தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
    உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே
    ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்
    சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
    உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
    புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
    உள்ளிச் சென்றோர் பழியலர் அதனாற்
    புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
    கருவி வானம் போல
    வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

    கழைதின் யானையார்

  • கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்

    புறநானூறு

    கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
    தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
    எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
    இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்
    முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
    இன்னாது அம்ம இயல்தேர் அண்ணல்
    இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்
    உள்ளி வருநர் நசையிழப் போரே
    அனையையும் அல்லை நீயே ஒன்னார்
    ஆர்எயில் அவர்கட்கு ஆகவும் நுமது எனப்
    பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்
    பூண்கடன் எந்தை நீஇரவலர் புரவே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • நோகோ யானே தேய்கமா காலை

    புறநானூறு

    நோகோ யானே தேய்கமா காலை
    பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்
    தன்அமர் காதலி புன்மேல் வைத்த
    இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்
    உலகுபுகத் திறந்த வாயில்
    பலரோடு உண்டல் மரீஇ யோனே

    வெள்ளெருக்கிலையார்

  • பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

    புறநானூறு

    பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
    மாமலை பயந்த காமரு மணியும்
    இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
    அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
    ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்
    சான்றோர் பாலர் ஆப
    சாலார் சாலார் பாலர் ஆகுபவே

    கண்ணகனார் நத்தத்தனார்

  • பொய்யா கியரோ பொய்யா கியரோ

    புறநானூறு

    பொய்யா கியரோ பொய்யா கியரோ
    பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
    சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
    பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ
    இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்பூண்
    போர்அடு தானை எவ்வி மார்பின்
    எ·குஉறு விழுப்புண் பல என
    வைகறு விடியல் இயம்பிய குரலே

    வெள்ளெருக்கிலையார்