புறநானூறு
கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வான் இன்னுறை தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
நெய்யடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணூறு மணியின் மாசுஅற மண்ணிப்
புதுமலர் கஞல இன்று பெயரின்
அதுமன் எம் பரிசில் ஆவியர் கோவே
பெருங்குன்றூர் கிழார்