புறநானூறு
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக் கண் மண்டை யடு ஊழ்மாறு பெயர
உண்கும் எந்தை நிற் காண்குவந் திசினே
நள் ளாதார் மிடல் சாய்ந்த
வல்லாள நின் மகிழிருக் கையே
உழுத நோன் பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆக நீ நயந்துண்ணும் நறவே
குன்றத் தன்ன களிறு பெயரக்
கடந்தட்டு வென்றோனும் நிற் கூறும்மே
‘வெலீஇயோன் இவன்’ எனக்
‘கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு
விரைந்து வந்து சமந் தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கு’ எனத்
தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
‘தொலைஇயோன் அவன்’ என
ஒருநீ ஆயினை பெரும பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
திருத்தகு சேஎய் நிற் பெற்றிசி னோர்க்கே
வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்