Tag: புறம்

  • உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்

    புறநானூறு

    உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்
    செருநவில் வேழம் கொண்மூ ஆகத்
    தேர்மா அழிதுளி தலைஇ நாம் உறக்
    கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை
    இழிதரு குருதியடு ஏந்திய ஒள்வாள்
    பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப
    மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்
    கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே
    ________________தண்ட மாப்பொறி
    மடக்கண் மயில் இயன் மறலி யாங்கு
    நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து
    மென்தோள் மகளிர் மன்றம் பேணார்
    புண்ணுவ___________________________
    _____________ அணியப் புரவி வாழ்கெனச்
    சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர
    நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
    அம்பழி பொழுதில் தமர்முகம் காணா
    _______________________ற்றொக்கான
    வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை
    மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு
    உரும் எறி மலையின் இருநிலம் சேரச்
    சென்றோன் மன்ற சொ________
    _________ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப
    வஞ்சி முற்றம் வயக்கள னாக
    அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்
    கொண்டனை பெரும குடபுலத்து அதரி
    பொலிக அத்தை நின் பணைதனற ளம்
    விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்ற
    புகர்முக முகவை பொலிக என்றி ஏத்திக்
    கொண்டனர் என்ப பெரியோர் யானும்
    அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற
    __________லெனாயினுங் காதலின் ஏத்தி
    நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்
    மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும
    பகைவர் புகழ்ந்த அண்மை நகைவர்க்குத்
    தாவின்று உதவும் பண்பின் பேயடு
    கணநரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
    செஞ்செவி எருவை குழீஇ
    அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே

    கோவூர்கிழார்

  • குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்

    புறநானூறு

    குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்
    பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
    பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
    மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே
    வைத்த தன்றே வெறுக்கை
    _____________________________________ணை
    புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
    தொக்குஉயிர் வெளவுங் காலை
    இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே

    பிரமனார்

  • விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி

    புறநானூறு

    விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி
    ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
    இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
    கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்
    பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்
    கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்
    ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
    ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
    மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த
    வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
    வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்
    புலவுக்களம் பொலிய வேட்டோய் நின்
    நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே

    மாங்குடி கிழார்

  • களரி பரந்து கள்ளி போகிப்

    புறநானூறு

    களரி பரந்து கள்ளி போகிப்
    பகலும் கூஉம் கூகையடு பிறழ்பல்
    ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
    அஞ்சுவந் தன்று இம் மஞ்சுபடு முதுகாடு
    நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
    என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
    எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
    மன்பதைக் கெல்லாம் தானாய்த்
    தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே

    தாயங்கண்ணனார்

  • போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்

    புறநானூறு

    போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்
    தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப்
    பறையடு தகைத்த கலப்பையென் முரவுவாய்
    ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
    மன்ற வேம்பின் ஒண்பூ உரைப்பக்
    குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
    அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்
    கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப
    வருகணை வாளி__________ அன்பின்று தலைஇ
    இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை
    வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக்
    குறைத்தலைப் படுபிணன் எதிரப் போர்பு அழித்து
    யானை எருத்தின் வாள்மட லோச்சி
    அதரி திரித்த ஆள் உகு கடாவின்
    மதியத் தன்ன என் விசியுறு தடாரி
    அகன்கண் அதிர ஆகுளி தொடாலின்
    பணைமருள் நெடுந்தாள் பல்பிணர்த் தடக்கைப்
    புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும
    களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி
    விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள்
    குடர்த்தலை மாலை சூடி உணத்தின
    ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து
    வயங்குபன் மீனினும் வாழியர் பல என
    உருகெழு பேய்மகள் அயரக்
    குருதித்துக ளாடிய களம்கிழ வோயே

    கல்லாடனார்

  • மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்

    புறநானூறு

    மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
    நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
    ஊரது நிலைமையும் இதுவே
    _____________________________

  • நெடு நீர நிறை கயத்துப்

    புறநானூறு

    நெடு நீர நிறை கயத்துப்
    படு மாரித் துளி போல
    நெய் துள்ளிய வறை முகக்கவும்
    சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்
    ஊன் கொண்ட வெண் மண்டை
    ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்
    வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
    செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
    ஈத்தோன் எந்தை இசைதனது ஆக
    வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்
    பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின
    புறவே புல்லருந்து பல்லா யத்தான்
    வில்இருந்த வெங்குறும் பின்று
    கடலே கால்தந்த கலம் எண்ணுவோர்
    கானற் புன்னைச் சினைநிலக் குந்து
    கழியே சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி
    பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து
    அன்னநன் நாட்டுப் பொருநம் யாமே
    பொரா அப் பொருந ரேம்
    குணதிசை நின்று குடமுதற் செலினும்
    வடதிசை நின்று தென்வயிற் செலினும்
    தென்திசை நின்று குறுகாது நீடினும்
    யாண்டும் நிற்க வெள்ளி யாம்
    வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே

    கோவூர் கிழார்

  • வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப

    புறநானூறு

    வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப
    புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
    தன்கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை
    அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
    வறன்யான் நீங்கல் வேண்டி என் அரை
    நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
    வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே
    காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
    நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
    நல்அரு வந்தை வாழியர் புல்லிய
    வேங்கட விறல்வரைப் பட்ட
    ஓங்கல் வானத்து உறையினும் பலவே

    கல்லாடனார்

  • மென் பாலான் உடன் அணைஇ

    புறநானூறு

    மென் பாலான் உடன் அணைஇ
    வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
    அறைக் கரும்பின் பூ அருந்தும்
    வன் பாலான் கருங்கால் வரகின்
    _____________________________________
    அங்கண் குறுமுயல் வெருவ அயல
    கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து
    விழவின் றாயினும் உழவர் மண்டை
    இருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து
    ____________கிணையேம் பெரும
    நெல் என்னாம் பொன் என்னாம்
    கனற்றக் கொண்ட நறவு என்னும்
    ____________மனை என்னா அவை பலவும்
    யான் தண்டவும் தான் தண்டான்
    நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
    மண் நாணப் புகழ் வேட்டு
    நீர் நாண நெய் வழங்கிப்
    புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
    அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
    யாண்டு நிற்க வெள்ளி மாண்ட
    உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
    வந்த வைகல் அல்லது
    சென்ற எல்லைச் செலவு அறி யேனே

    புறத்திணை நன்னாகனார்

  • ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து

    புறநானூறு

    ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
    தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
    நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
    நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
    தன்புகழ் ஏத்தினெ னாக ஊன்புலந்து
    அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்
    கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்
    தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப்
    பாம்பு உரி அன்ன வடிவின காம்பின்
    கழைபடு சொலியின் இழை அணி வாரா
    ஒண்பூங் கலிங்கம் உடீ இ நுண்பூண்
    வசிந்துவாங்கு நுசுப்பின் அவ்வாங்கு உந்திக்
    கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
    எற் பெயர்ந்த நோக்கி _______________
    __________________________ கற்கொண்டு
    அழித்துப் பிறந்ததென னாகி அவ்வழிப்
    பிறர் பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே
    குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி
    நரைமுக வூகமொடு உகளும் சென____
    _______________கன்றுபல கெழீ இய
    கான்கெழு நாடன் நெடுந்தேர் அவியன் என
    ஒருவனை உடையேன் மன்னே யானே
    அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே

    மாறோக்கத்து நப்பசலையார்