புறநானூறு
உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்
செருநவில் வேழம் கொண்மூ ஆகத்
தேர்மா அழிதுளி தலைஇ நாம் உறக்
கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை
இழிதரு குருதியடு ஏந்திய ஒள்வாள்
பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்
கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே
________________தண்ட மாப்பொறி
மடக்கண் மயில் இயன் மறலி யாங்கு
நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து
மென்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவ___________________________
_____________ அணியப் புரவி வாழ்கெனச்
சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர
நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
அம்பழி பொழுதில் தமர்முகம் காணா
_______________________ற்றொக்கான
வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை
மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு
உரும் எறி மலையின் இருநிலம் சேரச்
சென்றோன் மன்ற சொ________
_________ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப
வஞ்சி முற்றம் வயக்கள னாக
அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்
கொண்டனை பெரும குடபுலத்து அதரி
பொலிக அத்தை நின் பணைதனற ளம்
விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்ற
புகர்முக முகவை பொலிக என்றி ஏத்திக்
கொண்டனர் என்ப பெரியோர் யானும்
அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற
__________லெனாயினுங் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்
மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும
பகைவர் புகழ்ந்த அண்மை நகைவர்க்குத்
தாவின்று உதவும் பண்பின் பேயடு
கணநரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
செஞ்செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே
கோவூர்கிழார்