Tag: புறம்

  • ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த

    புறநானூறு

    ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த
    மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்
    பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
    பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
    செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி
    அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை
    கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்
    ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்
    நான்மறை குறித்தன்று அருளாகா மையின்
    அறம்குறித் தன்று பொருளா குதலின்
    மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
    கைபெய்த நீர் கடற் பரப்ப
    ஆம் இருந்த அடை நல்கிச்
    சோறு கொடுத்து மிகப் பெரிதும்
    வீறுசான் நன்கலம் வீசி நன்றும்
    சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்
    வாய்வன் காக்கை கூகையடு கூடிப்
    பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
    காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
    இல்என்று இல்வயின் பெயர மெல்ல
    இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி
    உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே

    சிறுவெண்டேரையார்

  • கார் எதிர் உருமின் உரறிக் கல்லென

    புறநானூறு

    கார் எதிர் உருமின் உரறிக் கல்லென
    ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்
    நின்வரவு அஞ்சலன் மாதோ நன்பல
    கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
    அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத்
    தாயின்நன்று பலர்க்கு ஈத்துத்
    தெருணடை மாகளிறொடு தன்
    அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்
    உருள்நடைப் பஃறேர் ஒன்னார்க் கொன்றுதன்
    தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்
    புரி மாலையர் பாடி னிக்குப்
    பொலந் தாமரைப் பூம் பாணரொடு
    கலந் தளைஇய நீள் இருக் கையால்
    பொறையடு மலிந்த கற்பின் மான்நோக்கின்
    வில்என விலங்கிய புருவத்து வல்லென
    நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று மகளிர்
    அல்குல் தாங்கா அசைஇ மெல்லென
    கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி
    அமிழ்தென மடுப்ப மாந்தி இகழ்விலன்
    நில்லா உலகத்து நிலையாமைநீ
    சொல்லா வேண்டா தோன்றல் முந்துஅறிந்த
    முழுதுஉணர் கேள்வியன் ஆகலின் விரகினானே

  • பெரிது ஆராச் சிறு சினத்தர்

    புறநானூறு

    பெரிது ஆராச் சிறு சினத்தர்
    சில சொல்லால் பல கேள்வியர்
    நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர்
    கலுழ் நனையால் தண் தேறலர்
    கனி குய்யாற் கொழுந் துவையர்
    தாழ் உவந்து தழூஉ மொழியர்
    பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி
    ஏம மாக இந்நிலம் ஆண்டோர்
    சிலரே பெரும கேள் இனி நாளும்
    பலரே தகை அஃது அறியா தோரே
    அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
    இன்னும் அற்று அதன் பண்பே அதனால்
    நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில்
    நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி அச்சுவரப்
    பாறுஇறை கொண்ட பறந்தலை மாகத
    கள்ளி போகிய களரி மருங்கின்
    வெள்ளில் நிறுத்த பின்றைக் கள்ளடு
    புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி
    புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு
    அழல்வாய்ப் புக்க பின்னும்
    பலர்வாய்த்து இராஅர் பகுத்துஉண் டோரே

    சங்க வருணர் என்னும் நாகரியர்

  • பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்

    புறநானூறு

    பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
    வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையடு
    பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல
    பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி
    விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்
    களரி மருங்கில் கால்பெயர்த் தாடி
    ஈம விளக்கின் வெருவரப் பேரும்
    காடுமுன் னினரே நாடுகொண் டோரும்
    நினக்கும் வருதல் வைகல் அற்றே
    வசையும் நிற்கும் இசையும் நிற்கும்
    அதனால் வசைநீக்கி இசைவேண்டியும்
    நசை வேண்டாது நன்று மொழிந்தும்
    நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு
    பொலம் படைய மா மயங்கிட
    இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
    கொள் என விடுவை யாயின் வெள்ளென
    ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
    ஈண்டுநீடு விளங்கும் நீ எய்திய புகழே

    கரவட்டனார்

  • பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

    புறநானூறு

    பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
    ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
    வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
    ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
    கைவிட் டனரே காதலர் அதனால்
    விட்டோரை விடாஅள் திருவே
    விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

    வான்மீகியார்

  • உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்

    புறநானூறு

    உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்
    செருநவில் வேழம் கொண்மூ ஆகத்
    தேர்மா அழிதுளி தலைஇ நாம் உறக்
    கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை
    இழிதரு குருதியடு ஏந்திய ஒள்வாள்
    பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப
    மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்
    கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே
    ________________தண்ட மாப்பொறி
    மடக்கண் மயில் இயன் மறலி யாங்கு
    நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து
    மென்தோள் மகளிர் மன்றம் பேணார்
    புண்ணுவ___________________________
    _____________ அணியப் புரவி வாழ்கெனச்
    சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர
    நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
    அம்பழி பொழுதில் தமர்முகம் காணா
    _______________________ற்றொக்கான
    வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை
    மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு
    உரும் எறி மலையின் இருநிலம் சேரச்
    சென்றோன் மன்ற சொ________
    _________ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப
    வஞ்சி முற்றம் வயக்கள னாக
    அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்
    கொண்டனை பெரும குடபுலத்து அதரி
    பொலிக அத்தை நின் பணைதனற ளம்
    விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்ற
    புகர்முக முகவை பொலிக என்றி ஏத்திக்
    கொண்டனர் என்ப பெரியோர் யானும்
    அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற
    __________லெனாயினுங் காதலின் ஏத்தி
    நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்
    மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும
    பகைவர் புகழ்ந்த அண்மை நகைவர்க்குத்
    தாவின்று உதவும் பண்பின் பேயடு
    கணநரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
    செஞ்செவி எருவை குழீஇ
    அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே

    கோவூர்கிழார்

  • குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்

    புறநானூறு

    குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்
    பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
    பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
    மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே
    வைத்த தன்றே வெறுக்கை
    _____________________________________ணை
    புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
    தொக்குஉயிர் வெளவுங் காலை
    இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே

    பிரமனார்

  • விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி

    புறநானூறு

    விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி
    ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
    இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
    கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்
    பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்
    கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்
    ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
    ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
    மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த
    வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
    வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்
    புலவுக்களம் பொலிய வேட்டோய் நின்
    நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே

    மாங்குடி கிழார்

  • களரி பரந்து கள்ளி போகிப்

    புறநானூறு

    களரி பரந்து கள்ளி போகிப்
    பகலும் கூஉம் கூகையடு பிறழ்பல்
    ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
    அஞ்சுவந் தன்று இம் மஞ்சுபடு முதுகாடு
    நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
    என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
    எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
    மன்பதைக் கெல்லாம் தானாய்த்
    தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே

    தாயங்கண்ணனார்

  • போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்

    புறநானூறு

    போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்
    தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப்
    பறையடு தகைத்த கலப்பையென் முரவுவாய்
    ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
    மன்ற வேம்பின் ஒண்பூ உரைப்பக்
    குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
    அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்
    கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப
    வருகணை வாளி__________ அன்பின்று தலைஇ
    இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை
    வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக்
    குறைத்தலைப் படுபிணன் எதிரப் போர்பு அழித்து
    யானை எருத்தின் வாள்மட லோச்சி
    அதரி திரித்த ஆள் உகு கடாவின்
    மதியத் தன்ன என் விசியுறு தடாரி
    அகன்கண் அதிர ஆகுளி தொடாலின்
    பணைமருள் நெடுந்தாள் பல்பிணர்த் தடக்கைப்
    புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும
    களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி
    விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள்
    குடர்த்தலை மாலை சூடி உணத்தின
    ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து
    வயங்குபன் மீனினும் வாழியர் பல என
    உருகெழு பேய்மகள் அயரக்
    குருதித்துக ளாடிய களம்கிழ வோயே

    கல்லாடனார்