புறநானூறு
உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் பஃறேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்
மணநாறு மார்பின் மறப்போர் அகுதை
குண்டுநீர் வரைப்பின் கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப
____________________________________________
என்னா வதுகொல் தானே _______
விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்
வினைநவில் யானை பிணிப்ப
வேர்துளங் கினநம் ஊருள் மரனே
கபிலர்