புறநானூறு
வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு
அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை
எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்
________________________________________________
புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு
மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
பூக்கோள் என ஏஎய்க் கயம்புக் கனனே
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்
சுணங்கணி வனமுலை அவளடு நாளை
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்
நீள்இலை எஃகம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
படைதொட் டனனே குருசில் ஆயிடைக்
களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
பெருங்கவின் இழப்பது கொல்லோ
மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே
பரணர்