Tag: புறம்

  • இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்

    புறநானூறு

    இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
    புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
    நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய
    மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
    அருமுனை இருக்கைத்து ஆயினும் வரிமிடற்று
    அரவுஉறை புற்றத்து அற்றே நாளும்
    புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
    அருகாது ஈயும் வண்மை
    உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

    மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

  • டைமுதல் புறவு சேர்ந்திருந்த

    புறநானூறு

    ______டைமுதல் புறவு சேர்ந்திருந்த
    புன்புலச் சீறூர் நெல்விளை யாதே
    வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
    இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன
    ________டமைந் தனனே
    அன்னன் ஆயினும் பாண நன்றும்
    வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட___
    களவுப் புளியன்ன விளை_____
    _________வாடூன் கொழுங்குறை
    கொய்குரல் அரிசியடு நெய்பெய்து அட்டுத்
    துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
    உண்டு இனி திருந்த பின்_______
    ___________தருகுவன் மாதோ
    தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
    முயல்வந்து கறிக்கும் முன்றில்
    சீறூர் மன்னனைப் பாடினை செலினே

  • எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற

    புறநானூறு

    எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற
    சில்விளை வரகின் புல்லென் குப்பை
    தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
    பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்
    ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
    சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
    வரகுடன் இரக்கும் நெடுந்தகை
    அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே

  • ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்

    புறநானூறு

    ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
    இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
    உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
    சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
    பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்
    கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
    அருமிளை இருக்கை யதுவே மனைவியும்
    வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது
    படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
    விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
    யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
    வருவிருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
    அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
    அண்ணல் யானை அணிந்த
    பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே

    தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

  • களிறுநீ றாடிய விடுநில மருங்கின்

    புறநானூறு

    களிறுநீ றாடிய விடுநில மருங்கின்
    வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்
    குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்
    செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
    முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை
    முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
    உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
    சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்
    கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
    மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
    அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
    கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
    அருமிளை இருக்கை யதுவே வென்வேல்ஊரே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்

    புறநானூறு

    வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
    புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்
    வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
    சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
    ஊக நுண்கோற் செறித்த அம்பின்
    வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்
    பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
    புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்
    குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த
    வெண்வாழ் தாய வண்காற் பந்தர்
    இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
    பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
    வலம்படு தானை வேந்தற்கு
    உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே

    ஆலத்தூர் கிழார்

  • நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்

    புறநானூறு

    நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்
    கடிய கூறும் வேந்தே தந்தையும்
    நெடிய அல்லது பணிந்துமொழி யலனே
    இஃதுஇவர் படிவம் ஆயின் வைஎயிற்று
    அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
    மரம்படு சிறுதீப் போல
    அணங்கா யினள் தான் பிறந்த ஊர்க்கே

    மதுரை மருதனிள நாகனார்

  • நீருள் பட்ட மாரிப் பேருறை

    புறநானூறு

    நீருள் பட்ட மாரிப் பேருறை
    மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
    கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
    உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
    தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்
    உண்க என உணரா உயவிற்று ஆயினும்
    தங்கனீர் சென்மோ புலவீர் நன்றும்
    சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
    வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
    இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்
    குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்
    குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
    சிறிது புறப்பட்டன்றோ விலளே தன்னூர்
    வேட்டக் குடிதொறுங் கூட்டு ________
    __________________________ உடும்பு செய்
    பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா
    வம்பணி யானை வேந்துதலை வரினும்
    உண்பது மன்னும் அதுவே
    பரிசில் மன்னும் குருசில்கொண் டதுவே

  • வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்

    புறநானூறு

    வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்
    கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்
    கள்ளரிக்கும் குயம் சிறுசின்
    மீன் சீவும் பாண் சேரி
    வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன
    குவளை உண்கண் இவளைத் தாயே
    ஈனா ளாயினள் ஆயின் ஆனாது
    நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
    செந்நுதல் யானை பிணிப்ப
    வருந்தல மன் எம் பெருந்துறை மரனே

    பரணர்

  • உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில

    புறநானூறு

    உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
    நாஇடைப் பஃறேர் கோலச் சிவந்த
    ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை
    எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்
    மணநாறு மார்பின் மறப்போர் அகுதை
    குண்டுநீர் வரைப்பின் கூடல் அன்ன
    குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப
    ____________________________________________
    என்னா வதுகொல் தானே _______
    விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்
    வினைநவில் யானை பிணிப்ப
    வேர்துளங் கினநம் ஊருள் மரனே

    கபிலர்